நம்மைச்சுற்றி பல எளிமையான உயர்ந்த மனிதர்கள்,நம்ம ஊரிலும் இந்த பூமியிலும் வாழ்ந்து சிறப்பான பணிகளை செய்துவருகிறார்கள்.அவர்களை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.நமது கோளாறான அளவுகோளின்படி உயர்ந்த மனிதர்கள் என்கிற அளவீடு வேறானதாக இருப்பதுதான் பெரிய குறையே....
நம்மையும் நமது நெருங்கிய உறவுகளையும் நிதானமாக கவனித்துப் புரிந்துகொள்ளாமல் ஓடும்போது,இவர்களை கவனிக்காமல் செல்வதில் ஆச்சரியமில்லை.அவ்வாறான மனிதர்களில் இன்றைக்கு மிக முக்கியமான ஒருவர்பற்றி பேசுவோம்....
அவர்,
"பால்பாண்டி எனும் பறவை மனிதர்"
பறவை ஆர்வலர்கள் அத்தனைபேருக்கும் பால்பாண்டியைத் தெரியும்...
பால்பாண்டியின் பாட்டையும் தெரியும்.எதைக்கேட்டாலும் நிறுத்தாமல் பேசும் பால்பாண்டி...
கேட்கும் சிலவற்றை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாமலும் போகலாம்...
பெரும்பாலான பிரபலங்களை தமக்குத் தெரியும் என்பவர்,அவர்களுக்கும் தம்மைத்தெரியும் எனும்போது உங்களின் மனதுக்குள். சந்தேகம் எட்டிப்பார்க்கும்...
இங்கிலாந்து இளவரசர் சார்லஸோடு முகமெல்லாம் சிரிப்பா பேசுகிற படத்தையும் பார்க்க முடிகிறது.கேரள முதல்வர் அச்சுதானந்தனோடு சமமாக ஒரேமேடையில் உட்கார்ந்திருக்கும் படத்தையும் காட்டுகிறார்.சோனியா காந்தியிடம் விருது வாங்குவதையும் காட்டுகிறார்...
இவரைப் பற்றி பல பத்திரிகை தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளையும் பார்க்கமுடிகிறது....
பறவைகளின் மீது உங்களுக்கு ஏன் இந்த ஆர்வம்?...
பறவைகளில் ஆண்பெண் வேறுபாடுகளை எப்படிக் கண்டறிவது?...
எந்தெந்தப் பறவைகள் இங்கேயே இருப்பவை?...
எந்தெந்தப் பறவைகள் வெளியிலிருந்து இங்கு வருபவை?....
ஒவ வொன்றும் எந்தப்பகுதி எந்த நாட்டிலிருந்து இங்கு வருகின்றன?...
வந்த பறவைகள் எல்லாமும் இங்கே கூடுகட்டுகிறதா ?
எந்த மாதத்தில் கூடுகட்டும்? கூட்டினை மென்மைப்படுத்த எதைக்கொண்டு கூடுகளை அமைக்கிறது ?
எல்லாக்கூடுகளும் ஒரே மாதிரியானவையா?
பறவைக்குப் பறவை கூடுகளின் வேறுபடுகள் என்ன?
மரத்திலும் தரையிலும் கூடுகளை அமைக்கும் பறவைகள் என்னென்ன ? இணைசேர்ந்த பிறகு முட்டையிட எத்தனை நாட்களாகும் ?...
ஒவ்வொரு பறவைகளின் முட்டைகளின் நிறங்கள் என்னென்ன?
அடைகாப்பது ஆணா பெண்ணா ?...
முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர எத்தனை நாட்களாகும்?...
வெளிவந்த குஞ்சு கண்விழிக்க எத்தனை நாட்களாகும்?
பறக்க எத்தனை நாட்களாகும்?... ரோமங்கள் என்ன நிறம்? குஞ்சுக்கு என்னமாதிரி உணவுகளை பெற்றோர்கள் ஊட்டும் ?...
-இப்படி எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் பதிலைக் கொட்டுகிற எளிய மனிதர் பால்பாண்டிக்குப்பிறகு இந்தப் பறவைகளை பாதுகாப்பதும்,களத்திலிருந்து தகவல்களை கடத்துவதும் யார் என்பது கேள்விக்குறியே.இப்போதிருக்கும் அவரது வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது அடுத்தவாரிசாக யாரையாவது உருவாக்குங்கள் என நம்மால் முழுமனதோடு சொல்ல முடியவில்லை...
இப்படியான மனிதர்களை இருக்கும்போதே நாம் கொண்டாடுவோம்.அப்போதுதான் அரசும் கொஞ்சமாவது இவர்களை கவனிக்கும்.
இல்லையென்றால் வழக்கம்போல....
இவரைப்பற்றி சில வரிகளில் மட்டுமே சொல்ல முயல்வது என்பது முழுமையானதாக இருக்காது.சொல்வதற்கு நிறைய இருக்கிறது....
சொல்வோம்...
நம்மையும் நமது நெருங்கிய உறவுகளையும் நிதானமாக கவனித்துப் புரிந்துகொள்ளாமல் ஓடும்போது,இவர்களை கவனிக்காமல் செல்வதில் ஆச்சரியமில்லை.அவ்வாறான மனிதர்களில் இன்றைக்கு மிக முக்கியமான ஒருவர்பற்றி பேசுவோம்....
அவர்,
"பால்பாண்டி எனும் பறவை மனிதர்"
பறவை ஆர்வலர்கள் அத்தனைபேருக்கும் பால்பாண்டியைத் தெரியும்...
பால்பாண்டியின் பாட்டையும் தெரியும்.எதைக்கேட்டாலும் நிறுத்தாமல் பேசும் பால்பாண்டி...
கேட்கும் சிலவற்றை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாமலும் போகலாம்...
பெரும்பாலான பிரபலங்களை தமக்குத் தெரியும் என்பவர்,அவர்களுக்கும் தம்மைத்தெரியும் எனும்போது உங்களின் மனதுக்குள். சந்தேகம் எட்டிப்பார்க்கும்...
இங்கிலாந்து இளவரசர் சார்லஸோடு முகமெல்லாம் சிரிப்பா பேசுகிற படத்தையும் பார்க்க முடிகிறது.கேரள முதல்வர் அச்சுதானந்தனோடு சமமாக ஒரேமேடையில் உட்கார்ந்திருக்கும் படத்தையும் காட்டுகிறார்.சோனியா காந்தியிடம் விருது வாங்குவதையும் காட்டுகிறார்...
இவரைப் பற்றி பல பத்திரிகை தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளையும் பார்க்கமுடிகிறது....
பறவைகளின் மீது உங்களுக்கு ஏன் இந்த ஆர்வம்?...
பறவைகளில் ஆண்பெண் வேறுபாடுகளை எப்படிக் கண்டறிவது?...
எந்தெந்தப் பறவைகள் இங்கேயே இருப்பவை?...
எந்தெந்தப் பறவைகள் வெளியிலிருந்து இங்கு வருபவை?....
ஒவ வொன்றும் எந்தப்பகுதி எந்த நாட்டிலிருந்து இங்கு வருகின்றன?...
வந்த பறவைகள் எல்லாமும் இங்கே கூடுகட்டுகிறதா ?
எந்த மாதத்தில் கூடுகட்டும்? கூட்டினை மென்மைப்படுத்த எதைக்கொண்டு கூடுகளை அமைக்கிறது ?
எல்லாக்கூடுகளும் ஒரே மாதிரியானவையா?
பறவைக்குப் பறவை கூடுகளின் வேறுபடுகள் என்ன?
மரத்திலும் தரையிலும் கூடுகளை அமைக்கும் பறவைகள் என்னென்ன ? இணைசேர்ந்த பிறகு முட்டையிட எத்தனை நாட்களாகும் ?...
ஒவ்வொரு பறவைகளின் முட்டைகளின் நிறங்கள் என்னென்ன?
அடைகாப்பது ஆணா பெண்ணா ?...
முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர எத்தனை நாட்களாகும்?...
வெளிவந்த குஞ்சு கண்விழிக்க எத்தனை நாட்களாகும்?
பறக்க எத்தனை நாட்களாகும்?... ரோமங்கள் என்ன நிறம்? குஞ்சுக்கு என்னமாதிரி உணவுகளை பெற்றோர்கள் ஊட்டும் ?...
-இப்படி எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் பதிலைக் கொட்டுகிற எளிய மனிதர் பால்பாண்டிக்குப்பிறகு இந்தப் பறவைகளை பாதுகாப்பதும்,களத்திலிருந்து தகவல்களை கடத்துவதும் யார் என்பது கேள்விக்குறியே.இப்போதிருக்கும் அவரது வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது அடுத்தவாரிசாக யாரையாவது உருவாக்குங்கள் என நம்மால் முழுமனதோடு சொல்ல முடியவில்லை...
இப்படியான மனிதர்களை இருக்கும்போதே நாம் கொண்டாடுவோம்.அப்போதுதான் அரசும் கொஞ்சமாவது இவர்களை கவனிக்கும்.
இல்லையென்றால் வழக்கம்போல....
இவரைப்பற்றி சில வரிகளில் மட்டுமே சொல்ல முயல்வது என்பது முழுமையானதாக இருக்காது.சொல்வதற்கு நிறைய இருக்கிறது....
சொல்வோம்...
No comments:
Post a Comment