Indian giant squirrel,
or Malabar giant squirrel,
(Ratufa indica)
இந்திய மலைஅணில்,
நீலகிரி மலைஅணில்,
மலபார் பெரிய அணில்...
எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவை மகாராஸ்டிர மாநிலத்தின் மாநிலவிலங்காக சிறப்பிக்கப் பட்டிருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக காணப்படும் இவற்றை எனக்கு மிகவும் பிடிக்கும்.மரத்தின்மீது எப்போதும் தளிர்களையோ காய்களையோ கொரித்துக்கொண்டே இருக்கும் இவற்றின் நிறமே தனி அழகு...
அணில் என்றாலே நமக்குச்சாம்பல் நிறமே நினைவுக்கு வரும் ஆனால் இவை மஞ்சள்கலந்தவெண்மையான அடிப்பகுதியும் பழுப்பும் கறுப்பும் அடர் பழுப்பும் கலந்த பளபளப்பான உடலின் மேல்பகுதியுடன் மனதைக் கவரும் விதமாக இருக்கும். இவற்றுன் வால்தான் எனக்கு குழப்பமாகவே உள்ளது ஆனைமலைப் பகுதிகளில் வால்முழுவதும் அடர்பழுப்பாக இருக்கும் இவற்றிற்கு நீலகிரி பகுதிகளில் வாலின் பாதிக்கும் குறைவான கடைசிப் பகுதி தந்தநிறத்தில் காணப்படும்...
(இது குன்னூர்-நீலகிரியில் கண்டது வாலின் நுனி தந்தநிறம்)
பூனைக்கும் சற்றுக்குறைவான உருவ அமைப்புடைய நன்கு வளர்ந்தவைகள் இரண்டடி நீளமும் இரண்டுகிலோ எடை வரையும் இருக்கும்...
(இது டாப்ஸ்லிப்-ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் கண்டது வால் முழுவதும் கரும்பழுப்பு நிறம்)
இவை கத்தும்போது காடே அதிரும்.
அணில்களில் பெரியவகைகள் நான்கு இருந்தாலும் இவை இங்குமட்டுமே காணக்கூடிய ஓரிடவாழ்விகளாகும்.
சூழலியல் தேடலுடன்...
Ramamurthi Ram
Facebook:
https://www.facebook.com/ramamurthi.ram.52
or Malabar giant squirrel,
(Ratufa indica)
இந்திய மலைஅணில்,
நீலகிரி மலைஅணில்,
மலபார் பெரிய அணில்...
எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவை மகாராஸ்டிர மாநிலத்தின் மாநிலவிலங்காக சிறப்பிக்கப் பட்டிருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக காணப்படும் இவற்றை எனக்கு மிகவும் பிடிக்கும்.மரத்தின்மீது எப்போதும் தளிர்களையோ காய்களையோ கொரித்துக்கொண்டே இருக்கும் இவற்றின் நிறமே தனி அழகு...
அணில் என்றாலே நமக்குச்சாம்பல் நிறமே நினைவுக்கு வரும் ஆனால் இவை மஞ்சள்கலந்தவெண்மையான அடிப்பகுதியும் பழுப்பும் கறுப்பும் அடர் பழுப்பும் கலந்த பளபளப்பான உடலின் மேல்பகுதியுடன் மனதைக் கவரும் விதமாக இருக்கும். இவற்றுன் வால்தான் எனக்கு குழப்பமாகவே உள்ளது ஆனைமலைப் பகுதிகளில் வால்முழுவதும் அடர்பழுப்பாக இருக்கும் இவற்றிற்கு நீலகிரி பகுதிகளில் வாலின் பாதிக்கும் குறைவான கடைசிப் பகுதி தந்தநிறத்தில் காணப்படும்...
(இது குன்னூர்-நீலகிரியில் கண்டது வாலின் நுனி தந்தநிறம்)
பூனைக்கும் சற்றுக்குறைவான உருவ அமைப்புடைய நன்கு வளர்ந்தவைகள் இரண்டடி நீளமும் இரண்டுகிலோ எடை வரையும் இருக்கும்...
(இது டாப்ஸ்லிப்-ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் கண்டது வால் முழுவதும் கரும்பழுப்பு நிறம்)
இவை கத்தும்போது காடே அதிரும்.
அணில்களில் பெரியவகைகள் நான்கு இருந்தாலும் இவை இங்குமட்டுமே காணக்கூடிய ஓரிடவாழ்விகளாகும்.
சூழலியல் தேடலுடன்...
Ramamurthi Ram
Facebook:
https://www.facebook.com/ramamurthi.ram.52
No comments:
Post a Comment