அன்று பூனைகள் இருந்தன...
பூனைகள் பற்றி நமக்குத் தெரியும்,
காட்டில் வாழக்கூடிய பூனைகள் பற்றி எவ்வளவு தெரியுமா ?
வனக்காடுகளிலும் ஊரையொட்டிய புதர்க்காடுகள் மற்றும் பாலைநிலங்களிலும் தன்னிச்சையாக வாழக்கூடிய பூனையினங்களில் பல வகைகள் இருந்தாலும் நாம் இன்று பார்க்கக் கூடிய பூனை, இந்தியாமுழுவதும்ஒருகாலத்தில் எங்கும் நிறைந்திருந்த பல பகுதிகளில் வெருவு என சொல்லக்கூடிய இந்தியக் காட்டுப்பூனை(jungle cat)....,
இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே வெகு அரிதாகக் காண முடிகிறது...
இன்றை வேகமாக உலகில் பல உயிரினங்கள் முற்றிலும் அழிக்கபடுவதை (அழிக்கப்பட்டதை) உணராமலேயே கடந்துகொண்டிருக்கிறோம்.பல பெரிய உயிரினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவுகூட இதுபோன்ற சிற்றுயிர்களுக்கு கொடுக்கப்படாதது கொஞ்சம் வேதனைதான்.அதுவும் பல வன உயிரின ஆர்வலர்களின் கவனத்தில் வரதாததுகூட கவனிக்கப்படவேண்டிய ஒன்று...
ஒவ்வொரு உயிரினமும் அதனதன் பங்கிற்கு சூழலியல் செயல்பாட்டை நடத்திக்கொண்டிருக்கிறது.அதில் இதுபோன்ற சிறு வேட்டையாடிகளின் பங்கு மிக மிக அவசியமானது...
எப்படியென்றால்,உணவுச்சங்கிலி சிதைக்கப்பட்டால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக மயில்களின் இயற்கை எதிரிகளான பூனைவகைகளும் நரியினமும் மிக மிக அருகிவிட்டதால் இங்கு மயில்களின் எண்ணிக்கை அதிகமாக பெருகிவிட்டது.இப்போது எமது பகுதி விவசாயிகளுக்கு மயில்களே பெரும் பிரச்சனை...
இந்தப் பூனைகள் கோழிகளை பிடிக்கிறது என்பதற்காகவும்,தவறான மருத்துவ மூடத்தனத்தாலும் பூனைகள் வெகுவாக கொல்லப்பட்டன.அவைசெய்துவந்த இயற்கைச்சமநிலையாக்கும் வேலையை இனிச் செய்வது யார்?...
கடந்தவருடம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் பந்திப்பூர் காட்டிற்குள் 🐯புலியைத் தேடி சென்றபோது எதிர்பாராத விதமாக பூனையை கண்டோம்...
அது காட்டுப்பூனை...
காட்டில் இருக்கிறதினால் அது காட்டுப்பூனையா?
இல்லை காட்டுப்பூனைக்கும் வீட்டுப்பூனைக்கும் வேறுபாடுகள் உண்டு...
வீட்டுப்பூனை தயிர்சாதம்,வடையெல்லாம் சாப்பிடும் மனிதனோடு சேர்ந்ததினால் மனிதன் சாப்பிட்டறதை எல்லாம் சாப்பிட்டு சில வசதியான பூனைகள்😸 மனுசனைப்போலவே தொப்பையோடு காணலாம்.
சர்க்கரை வியாதிகூட💉 இருக்கும்!...
ஆனா நம்மகாட்டுப்பூனை "சுத்த அசைவம்"
-அது கொரியுண்ணிகளான
🐇முயல்
🐀எலி மற்றும் அணில்,
🐦பறவைகள்,
🐍பாம்பு,
🐸தவளை...
இப்படி கிடைத்ததை எல்லாம் சடச்சுட சாப்பிடும். அதன் எடை மற்றும் உருவத்தைவிட சற்று பெரிதானவற்றையும் அடித்து உண்ணும் வேட்டைத் திறன் உடையவை. எளிதில் விரைந்து மரம் ஏறக்கூடிய திறன்💪 வாய்ந்தவை....
மேலே சொன்னதுபோல காட்டுப்பூனையிலும் பல இனங்கள் உண்டு நாங்கள் கண்டது 🐈இந்திக் காட்டுப்பூனை(jungle cat),
அதுவும் நாங்கள் பார்த்த அந்த நேரம் மயிர்சிலிர்க்க வைத்த தருணம்- எங்களுக்கல்ல பூனைக்கு....
பூனையின் எதிரே ஒரு கீரி வந்தது இரண்டும் சண்டையிடத் தயார் ஆவதுபோல் சூழ்நிலை.பூனை தன்உடம்பை சிலிர்த்து மயிர்கள்ளை விரைப்பாகியது பிறகு என்ன நினைத்ததோ அல்லது ஏதாவது உடன்பாடு ஆகிவிட்டதோ! இரண்டும்வேறு வேறு திசைகளில் சென்றுவிட்டன...
காட்டுப்பூனைகள்🐱 மூன்றிலிருந்து பனிரெண்டு கிலோ வரையான எடையுடன் இருக்கும்.மிதக்கும் தன்மையுள்ள விலா எலும்புகளில் முன்னங்கால்கள் இணைந்திருப்பதால் தலை நுழையக்கூடிய எந்த சந்திலும் நம்ம பூனையார் நுழைந்து விடுவார்...
தமது வாழ்நாளில் நூற்றிஐம்பது குட்டிகள்வரை போடும்.இரண்டுமாத காலம் வரை குட்டிகள் தாயின் வயிற்றிலிருக்கும்...
ஒவ்வொரு உயிரினத்தையும் இந்த பூமியில் நிலைநிறுத்த இயற்கை மிகப்பெரும் கருணைகாட்டி சில சிறப்புத் தன்மைகளை ஒவ்வொன்றிற்கும் வழங்கியிருப்பது ஆச்சரியம்தானே அவ்வகையில் இதன்கால்களில் நடக்கும்போது எவ்வித அதிர்வையும் உண்டாக்காத தன்மையுடைய மெத்தென்ற மென்மையான அடிப்பரப்புள்ள வலிமையான கால்கள்!.😜
இன்றைய காலகட்டத்தில் மிகுந்த கவலையடையக் கூடிய நிலையில்😿 இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
காரணம் வனப்பரப்பு குறைந்துகொண்டே வருவதோடு மட்டும் இல்லாமல் நகர்பெருக்கம் மற்றும் பேராசையின் காரணமாக மனிதன் வாழும்பகுதிக்கு அருகிலுள்ள புதர்காடுகளை அழித்ததினால் அவற்றை வாழிடமாக கொண்டிருந்த இதுபோன்ற சிறிய வகை ஊணுண்ணிகள் வாழிடமில்லாமல் எஞ்சியவை காப்புக் காடுகளை நோக்கி நகர்ந்துவிட்டன.
அங்கும் வாழ்க்கைப் போட்டியினால் மிகுந்த சவால்களுடனேயே இருக்கிறது...😢.இப்படியே போனால் இவற்றைக் காணும் கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்!...
இதற்குக் காரணம் நாம்தான்.
😈
சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram
https://www.facebook.com/ramamurthi.ram.52
பூனைகள் பற்றி நமக்குத் தெரியும்,
காட்டில் வாழக்கூடிய பூனைகள் பற்றி எவ்வளவு தெரியுமா ?
வனக்காடுகளிலும் ஊரையொட்டிய புதர்க்காடுகள் மற்றும் பாலைநிலங்களிலும் தன்னிச்சையாக வாழக்கூடிய பூனையினங்களில் பல வகைகள் இருந்தாலும் நாம் இன்று பார்க்கக் கூடிய பூனை, இந்தியாமுழுவதும்ஒருகாலத்தில் எங்கும் நிறைந்திருந்த பல பகுதிகளில் வெருவு என சொல்லக்கூடிய இந்தியக் காட்டுப்பூனை(jungle cat)....,
இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே வெகு அரிதாகக் காண முடிகிறது...
இன்றை வேகமாக உலகில் பல உயிரினங்கள் முற்றிலும் அழிக்கபடுவதை (அழிக்கப்பட்டதை) உணராமலேயே கடந்துகொண்டிருக்கிறோம்.பல பெரிய உயிரினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவுகூட இதுபோன்ற சிற்றுயிர்களுக்கு கொடுக்கப்படாதது கொஞ்சம் வேதனைதான்.அதுவும் பல வன உயிரின ஆர்வலர்களின் கவனத்தில் வரதாததுகூட கவனிக்கப்படவேண்டிய ஒன்று...
ஒவ்வொரு உயிரினமும் அதனதன் பங்கிற்கு சூழலியல் செயல்பாட்டை நடத்திக்கொண்டிருக்கிறது.அதில் இதுபோன்ற சிறு வேட்டையாடிகளின் பங்கு மிக மிக அவசியமானது...
எப்படியென்றால்,உணவுச்சங்கிலி சிதைக்கப்பட்டால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக மயில்களின் இயற்கை எதிரிகளான பூனைவகைகளும் நரியினமும் மிக மிக அருகிவிட்டதால் இங்கு மயில்களின் எண்ணிக்கை அதிகமாக பெருகிவிட்டது.இப்போது எமது பகுதி விவசாயிகளுக்கு மயில்களே பெரும் பிரச்சனை...
இந்தப் பூனைகள் கோழிகளை பிடிக்கிறது என்பதற்காகவும்,தவறான மருத்துவ மூடத்தனத்தாலும் பூனைகள் வெகுவாக கொல்லப்பட்டன.அவைசெய்துவந்த இயற்கைச்சமநிலையாக்கும் வேலையை இனிச் செய்வது யார்?...
கடந்தவருடம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் பந்திப்பூர் காட்டிற்குள் 🐯புலியைத் தேடி சென்றபோது எதிர்பாராத விதமாக பூனையை கண்டோம்...
அது காட்டுப்பூனை...
காட்டில் இருக்கிறதினால் அது காட்டுப்பூனையா?
இல்லை காட்டுப்பூனைக்கும் வீட்டுப்பூனைக்கும் வேறுபாடுகள் உண்டு...
வீட்டுப்பூனை தயிர்சாதம்,வடையெல்லாம் சாப்பிடும் மனிதனோடு சேர்ந்ததினால் மனிதன் சாப்பிட்டறதை எல்லாம் சாப்பிட்டு சில வசதியான பூனைகள்😸 மனுசனைப்போலவே தொப்பையோடு காணலாம்.
சர்க்கரை வியாதிகூட💉 இருக்கும்!...
ஆனா நம்மகாட்டுப்பூனை "சுத்த அசைவம்"
-அது கொரியுண்ணிகளான
🐇முயல்
🐀எலி மற்றும் அணில்,
🐦பறவைகள்,
🐍பாம்பு,
🐸தவளை...
இப்படி கிடைத்ததை எல்லாம் சடச்சுட சாப்பிடும். அதன் எடை மற்றும் உருவத்தைவிட சற்று பெரிதானவற்றையும் அடித்து உண்ணும் வேட்டைத் திறன் உடையவை. எளிதில் விரைந்து மரம் ஏறக்கூடிய திறன்💪 வாய்ந்தவை....
மேலே சொன்னதுபோல காட்டுப்பூனையிலும் பல இனங்கள் உண்டு நாங்கள் கண்டது 🐈இந்திக் காட்டுப்பூனை(jungle cat),
அதுவும் நாங்கள் பார்த்த அந்த நேரம் மயிர்சிலிர்க்க வைத்த தருணம்- எங்களுக்கல்ல பூனைக்கு....
பூனையின் எதிரே ஒரு கீரி வந்தது இரண்டும் சண்டையிடத் தயார் ஆவதுபோல் சூழ்நிலை.பூனை தன்உடம்பை சிலிர்த்து மயிர்கள்ளை விரைப்பாகியது பிறகு என்ன நினைத்ததோ அல்லது ஏதாவது உடன்பாடு ஆகிவிட்டதோ! இரண்டும்வேறு வேறு திசைகளில் சென்றுவிட்டன...
காட்டுப்பூனைகள்🐱 மூன்றிலிருந்து பனிரெண்டு கிலோ வரையான எடையுடன் இருக்கும்.மிதக்கும் தன்மையுள்ள விலா எலும்புகளில் முன்னங்கால்கள் இணைந்திருப்பதால் தலை நுழையக்கூடிய எந்த சந்திலும் நம்ம பூனையார் நுழைந்து விடுவார்...
தமது வாழ்நாளில் நூற்றிஐம்பது குட்டிகள்வரை போடும்.இரண்டுமாத காலம் வரை குட்டிகள் தாயின் வயிற்றிலிருக்கும்...
ஒவ்வொரு உயிரினத்தையும் இந்த பூமியில் நிலைநிறுத்த இயற்கை மிகப்பெரும் கருணைகாட்டி சில சிறப்புத் தன்மைகளை ஒவ்வொன்றிற்கும் வழங்கியிருப்பது ஆச்சரியம்தானே அவ்வகையில் இதன்கால்களில் நடக்கும்போது எவ்வித அதிர்வையும் உண்டாக்காத தன்மையுடைய மெத்தென்ற மென்மையான அடிப்பரப்புள்ள வலிமையான கால்கள்!.😜
இன்றைய காலகட்டத்தில் மிகுந்த கவலையடையக் கூடிய நிலையில்😿 இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
காரணம் வனப்பரப்பு குறைந்துகொண்டே வருவதோடு மட்டும் இல்லாமல் நகர்பெருக்கம் மற்றும் பேராசையின் காரணமாக மனிதன் வாழும்பகுதிக்கு அருகிலுள்ள புதர்காடுகளை அழித்ததினால் அவற்றை வாழிடமாக கொண்டிருந்த இதுபோன்ற சிறிய வகை ஊணுண்ணிகள் வாழிடமில்லாமல் எஞ்சியவை காப்புக் காடுகளை நோக்கி நகர்ந்துவிட்டன.
அங்கும் வாழ்க்கைப் போட்டியினால் மிகுந்த சவால்களுடனேயே இருக்கிறது...😢.இப்படியே போனால் இவற்றைக் காணும் கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்!...
இதற்குக் காரணம் நாம்தான்.
😈
சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram
https://www.facebook.com/ramamurthi.ram.52