பில்லாய்....
அதபாருங்...
ஆனெய்ங்க பக்கத்துள நிக்கறதெல்லாம் பில்லாய்ம்மானுங்...
-என்னிடம் அங்கு மீன் பிடிக்கிற பரிசல்கார நண்பர் சொன்னது.
என் வாழ்வில் முதன்முதலாய் வனச்சூழலில் இதை பார்த்தது அங்கேதான்...
எமது ஊரிற்கு மிக அருகில் சிறுமுகை பகுதியில்
பவானிசாகர் அணைக்கு பின்பக்கமா பவானிநீர் வந்து சேருகிற இடம் கரையிலிருந்தே காட்டின் துவக்கம் ஆரம்பிக்கும். மாலைநேரத்தில் யானைகளோடு,கடமாக்களும்(Indian Gaur),கடமான்களும்(sambar deer),புள்ளிமான்களும்(spotted deer),காட்டுப்பன்றிகளும்(wild boar) இவற்றோடு அங்குள்ள மக்களால் பில்லாய் எனப்படுகிற தற்போது அரிதான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் புல்வாய்மான்களும்(Black Buck)தண்ணீர் குடிக்க வருவதை காணலாம்...
(Black Buck)
புல்வாய்...
புல்வெளிமான்...
வெளிமான்...
முருகுமான்...
திருகுமான்...
திருகுகொம்புமான்...
கலைமான்...
கருஞ்சிக்கிடாய்(ஆண்)...
இப்படி பல பெயர்கள் உண்டு.ஒரே விலங்கிற்கோ பறவைக்கோ இப்படி பல பெயர்கள் இருப்பதென்பது இந்த மக்களிடையே மிக நீண்ட தொடர்புடையது என விளங்கும். சங்க இலக்கியங்களில் இரலைமான் என குறிப்பிடப்படும் இது,சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்தே இதன் தொடர்பின் சான்றாக கொற்றவையின் வாகனமாக சிலைகள் உள்ளன். இதன் தாய் நிலமும் இந்திய மண்தான்...
ஒரு காலத்தில் இந்த துணைக்கண்டம் எப்படி இருந்தது என கற்பனை செய்து பாருங்கள்.,
நீண்ட தொலைவு இடைவெளியில் மனிதக் குடியிருப்புகள். சிமென்டையும் சுண்ணாம்பாலும் கட்டப்படாத எளிமையான வாழ்விடங்கள்.சுய தேவைக்காக மட்டும் கொஞ்சமான விவசாய நிலங்கள்.மற்ற இடமெங்கும் காடுகள்....
காடுகள்....
அந்தக் சமவெளிகாடுகளில்
எங்கு நிறைந்த வெளிமான்கள் அதை அடித்துண்கிற
சிவிங்கிப்புலிகள் இவற்றோடு அனைத்துவிதமான விலங்குகளும்.எப்படி இருந்திருக்கும்? அந்தச்சூழல் அற்புதமல்லவா!!!....
எங்கும் பரவியிருந்த இவற்றை மன்னர்களும்,மக்களும் போட்டிபோட்டுக்கொண்டு, மாமிசத்தில் மருத்துவகுணம் இருக்கிறது, கொம்புகளில் மந்திரசக்தி இருக்கிறது,தோலில் அமர்ந்து தியானம் செய்கிறோம் என தாறுமாறாக கொன்ற நிலையில் ஒண்டவந்த இங்லீஸ்காரனும் வீரம்,பொழுதுபோக்கு என அவனவன் பங்கிற்கு சுட்டுச் சுட்டு தின்றுவிட்டான்...
இன்றைக்கு இங்கே தரைவாழ் விலங்குகளில் மிக வேகமாக ஓடக்கூடியது இந்த வெளிமான்கள். வேகம் மணிக்கு 80 கி.மீ. மேல்.இதை உண்ணும் சிவிங்கிப்புலிதான் மிக வேகம் மணிக்கு 120 கி.மீ...
இன்று சிவிங்கிப்புலி இந்திய மண்ணிலேயே இல்லை.சமவெளிக் காடுகள் என்பது கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் இந்தப் புல்வாய்களின் வாழிடம் என்பது தமிழகத்தில் மூன்று நான்கு இடங்கள் அதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி தீவுபோன்ற குறுகிய,சவால் நிறைந்த வாழிடமாகிவிட்டது என்பது மிக வேதனை...
கோடியக்கரை கடற்கரையை ஒட்டி வெளிமான்கள் வாழிடமான இந்தப் பகுதி, இன்றைய நிலை, இருக்கிற குறுகியபரப்பில் சீமைக்கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பே அதிகம்.அதிக அளவில் நீர்குடிக்கும் இவற்றிற்கு இயற்கையான நீர்நிலைகள் அற்ற நிலையில் உணவும் நீரும் பற்றாக்குறையில் பரிதாபமான நிலைதான்...
அடுத்ததாக திருநெல்வேலிக்கு அருகில் வல்லநாடு வெளிமான் வாழ்விடம்.இங்கு மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றனவாம்...
கிண்டியிலுள்ள தேசியப் பூங்கா.சென்னை நகரத்தின் நடுவில் இதன் வாழ்வு என்பது பரிதாபம்தான்...
இருப்பதிலேயே நல்ல சூழல் உள்ள இடமென்றால் அது நமது சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியான, மோயாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிதான்.சீகூர்,தெங்குமரஹாடா முதல் சிறுமுகை வரையான சமவெளிபகுதிகளில் காண முடிகிறது....
அடர்ந்த காடுகளில் இவை வாழ விரும்பாததற்கு காரணம் அங்கு புற்கள் குறைவு பாதுகாப்பும் குறைவு அதனாலேயே புல்வெளிக்காடுகளையே வாழிடமாக தேர்ந்தெடுத்திருந்தன....
ஆண் அடர்ந்த கரும்பழுப்பு நிறத்துடன் நீண்ட வளையவரிகளுடைய கொம்புகளோடு காணப்படும்.பெண் செம்பழுப்பாக கொம்புகளற்று ஆடுகளைப்போல் காணப்படும்.இணையைக் கவர ஆண்களிடையே பலத்த சண்டை நடக்கும்.கொம்புகள் மோதும் சத்தமே பயங்கரமாக இருக்கும் கோடியக்கரையில் நடந்த சண்டையினை நான் படம்பிடித்த வீடியோவை இணத்துள்ளேன் பாருங்கள். மான்களைப்போல் இவற்றிற்கு கொம்புகள் விழுந்து முளைப்பதில்லை.வாழ்நாள் முழுவதும் ஒரே வலிமையான கிளைகளற்ற கொம்புகள்தான்.அதனாலேயே மான்களிலிருந்து வேறுபடுத்தி இரலைகள் என்கிறார்கள்.இவையும் இருநிலை செரிமானத் தன்மையுடைய அசைபோடும் விலங்கு...
எஞ்சிய நிலையில் இருக்கும் கொஞ்சமான வெளிமான்களையும் மாமிசத்திற்காகவும்,தோலிற்காகவும் கொம்புகளுக்காகவும் கொல்லப்பட்டு வருகிறது.இந்தி நடிகன் சல்மான்கான் ராஜஸ்தானில் வேட்டையாடியது இந்த வெளிமானைத்தான். இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை உலகமே அறியும்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியும் இந்த வெளிமானை வேட்டையாடியதற்காத்தான் தண்டனை கிடைத்தது(இப்படி அறிமுகம் செய்யவேண்டியதாக இருக்கிறது)....
இந்த தண்டனைகளுக்குப் பிறகே வேட்டைகள் குறைந்தன ஆனாலும் கள்ளவேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை சமீபத்தில் கோடியக்கரையில் கொம்புகளை கைப்பற்றியபோது வெளிச்சமாகிவிட்டது...
இதே நிலை தொடர்ந்தால்... தாய்நிலத்தில் இருந்து மனிதர்களால் சுத்தமாக ஒழிக்கப்பட்ட "சிவிங்கிப்புலி" ஒரேயொரு ஜோடிக்காக,ஈராக்கிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்,இதற்கும் அந்தநிலை ஒருநாள் வரலாம். இருப்பதைக் காப்பாற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் ???...
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
இன்னும் விரிவான பதிவுகள் எமது முகநூலில்...
இணைப்பு:
https://www.facebook.com/ramamurthi.ram.52
அதபாருங்...
ஆனெய்ங்க பக்கத்துள நிக்கறதெல்லாம் பில்லாய்ம்மானுங்...
-என்னிடம் அங்கு மீன் பிடிக்கிற பரிசல்கார நண்பர் சொன்னது.
என் வாழ்வில் முதன்முதலாய் வனச்சூழலில் இதை பார்த்தது அங்கேதான்...
எமது ஊரிற்கு மிக அருகில் சிறுமுகை பகுதியில்
பவானிசாகர் அணைக்கு பின்பக்கமா பவானிநீர் வந்து சேருகிற இடம் கரையிலிருந்தே காட்டின் துவக்கம் ஆரம்பிக்கும். மாலைநேரத்தில் யானைகளோடு,கடமாக்களும்(Indian Gaur),கடமான்களும்(sambar deer),புள்ளிமான்களும்(spotted deer),காட்டுப்பன்றிகளும்(wild boar) இவற்றோடு அங்குள்ள மக்களால் பில்லாய் எனப்படுகிற தற்போது அரிதான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் புல்வாய்மான்களும்(Black Buck)தண்ணீர் குடிக்க வருவதை காணலாம்...
(Black Buck)
புல்வாய்...
புல்வெளிமான்...
வெளிமான்...
முருகுமான்...
திருகுமான்...
திருகுகொம்புமான்...
கலைமான்...
கருஞ்சிக்கிடாய்(ஆண்)...
இப்படி பல பெயர்கள் உண்டு.ஒரே விலங்கிற்கோ பறவைக்கோ இப்படி பல பெயர்கள் இருப்பதென்பது இந்த மக்களிடையே மிக நீண்ட தொடர்புடையது என விளங்கும். சங்க இலக்கியங்களில் இரலைமான் என குறிப்பிடப்படும் இது,சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்தே இதன் தொடர்பின் சான்றாக கொற்றவையின் வாகனமாக சிலைகள் உள்ளன். இதன் தாய் நிலமும் இந்திய மண்தான்...
ஒரு காலத்தில் இந்த துணைக்கண்டம் எப்படி இருந்தது என கற்பனை செய்து பாருங்கள்.,
நீண்ட தொலைவு இடைவெளியில் மனிதக் குடியிருப்புகள். சிமென்டையும் சுண்ணாம்பாலும் கட்டப்படாத எளிமையான வாழ்விடங்கள்.சுய தேவைக்காக மட்டும் கொஞ்சமான விவசாய நிலங்கள்.மற்ற இடமெங்கும் காடுகள்....
காடுகள்....
அந்தக் சமவெளிகாடுகளில்
எங்கு நிறைந்த வெளிமான்கள் அதை அடித்துண்கிற
சிவிங்கிப்புலிகள் இவற்றோடு அனைத்துவிதமான விலங்குகளும்.எப்படி இருந்திருக்கும்? அந்தச்சூழல் அற்புதமல்லவா!!!....
எங்கும் பரவியிருந்த இவற்றை மன்னர்களும்,மக்களும் போட்டிபோட்டுக்கொண்டு, மாமிசத்தில் மருத்துவகுணம் இருக்கிறது, கொம்புகளில் மந்திரசக்தி இருக்கிறது,தோலில் அமர்ந்து தியானம் செய்கிறோம் என தாறுமாறாக கொன்ற நிலையில் ஒண்டவந்த இங்லீஸ்காரனும் வீரம்,பொழுதுபோக்கு என அவனவன் பங்கிற்கு சுட்டுச் சுட்டு தின்றுவிட்டான்...
இன்றைக்கு இங்கே தரைவாழ் விலங்குகளில் மிக வேகமாக ஓடக்கூடியது இந்த வெளிமான்கள். வேகம் மணிக்கு 80 கி.மீ. மேல்.இதை உண்ணும் சிவிங்கிப்புலிதான் மிக வேகம் மணிக்கு 120 கி.மீ...
இன்று சிவிங்கிப்புலி இந்திய மண்ணிலேயே இல்லை.சமவெளிக் காடுகள் என்பது கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் இந்தப் புல்வாய்களின் வாழிடம் என்பது தமிழகத்தில் மூன்று நான்கு இடங்கள் அதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி தீவுபோன்ற குறுகிய,சவால் நிறைந்த வாழிடமாகிவிட்டது என்பது மிக வேதனை...
கோடியக்கரை கடற்கரையை ஒட்டி வெளிமான்கள் வாழிடமான இந்தப் பகுதி, இன்றைய நிலை, இருக்கிற குறுகியபரப்பில் சீமைக்கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பே அதிகம்.அதிக அளவில் நீர்குடிக்கும் இவற்றிற்கு இயற்கையான நீர்நிலைகள் அற்ற நிலையில் உணவும் நீரும் பற்றாக்குறையில் பரிதாபமான நிலைதான்...
அடுத்ததாக திருநெல்வேலிக்கு அருகில் வல்லநாடு வெளிமான் வாழ்விடம்.இங்கு மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றனவாம்...
கிண்டியிலுள்ள தேசியப் பூங்கா.சென்னை நகரத்தின் நடுவில் இதன் வாழ்வு என்பது பரிதாபம்தான்...
இருப்பதிலேயே நல்ல சூழல் உள்ள இடமென்றால் அது நமது சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியான, மோயாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிதான்.சீகூர்,தெங்குமரஹாடா முதல் சிறுமுகை வரையான சமவெளிபகுதிகளில் காண முடிகிறது....
அடர்ந்த காடுகளில் இவை வாழ விரும்பாததற்கு காரணம் அங்கு புற்கள் குறைவு பாதுகாப்பும் குறைவு அதனாலேயே புல்வெளிக்காடுகளையே வாழிடமாக தேர்ந்தெடுத்திருந்தன....
ஆண் அடர்ந்த கரும்பழுப்பு நிறத்துடன் நீண்ட வளையவரிகளுடைய கொம்புகளோடு காணப்படும்.பெண் செம்பழுப்பாக கொம்புகளற்று ஆடுகளைப்போல் காணப்படும்.இணையைக் கவர ஆண்களிடையே பலத்த சண்டை நடக்கும்.கொம்புகள் மோதும் சத்தமே பயங்கரமாக இருக்கும் கோடியக்கரையில் நடந்த சண்டையினை நான் படம்பிடித்த வீடியோவை இணத்துள்ளேன் பாருங்கள். மான்களைப்போல் இவற்றிற்கு கொம்புகள் விழுந்து முளைப்பதில்லை.வாழ்நாள் முழுவதும் ஒரே வலிமையான கிளைகளற்ற கொம்புகள்தான்.அதனாலேயே மான்களிலிருந்து வேறுபடுத்தி இரலைகள் என்கிறார்கள்.இவையும் இருநிலை செரிமானத் தன்மையுடைய அசைபோடும் விலங்கு...
எஞ்சிய நிலையில் இருக்கும் கொஞ்சமான வெளிமான்களையும் மாமிசத்திற்காகவும்,தோலிற்காகவும் கொம்புகளுக்காகவும் கொல்லப்பட்டு வருகிறது.இந்தி நடிகன் சல்மான்கான் ராஜஸ்தானில் வேட்டையாடியது இந்த வெளிமானைத்தான். இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை உலகமே அறியும்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியும் இந்த வெளிமானை வேட்டையாடியதற்காத்தான் தண்டனை கிடைத்தது(இப்படி அறிமுகம் செய்யவேண்டியதாக இருக்கிறது)....
இந்த தண்டனைகளுக்குப் பிறகே வேட்டைகள் குறைந்தன ஆனாலும் கள்ளவேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை சமீபத்தில் கோடியக்கரையில் கொம்புகளை கைப்பற்றியபோது வெளிச்சமாகிவிட்டது...
இதே நிலை தொடர்ந்தால்... தாய்நிலத்தில் இருந்து மனிதர்களால் சுத்தமாக ஒழிக்கப்பட்ட "சிவிங்கிப்புலி" ஒரேயொரு ஜோடிக்காக,ஈராக்கிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்,இதற்கும் அந்தநிலை ஒருநாள் வரலாம். இருப்பதைக் காப்பாற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் ???...
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
இன்னும் விரிவான பதிவுகள் எமது முகநூலில்...
இணைப்பு:
https://www.facebook.com/ramamurthi.ram.52
No comments:
Post a Comment