Tuesday, 16 May 2017

காற்றே என்ன விலை ?



மனிதர்கள் வாழ்வு உணர்ச்சிகளின் அடிப்படையிலானது இந்த மரங்களை  மாற்றிடங்களில் நடுவதுகூட உளவியல் தொடர்பானதுதான்...
தலைவர்களுக்காக தற்கொலை செய்வதும் பிடித்த நடிகரிற்காக அலகு குத்துவதும் கூட இது மாதிரி உணர்ச்சிகளின் அடிப்படையில்தான்...
காடுவழியே போகும் ரோட்டில் பயணிக்கும் போது வண்டியை நிறுத்தி வழியில் காணும் குரங்கிற்கும்,மான்களுக்கும்., சமோசாவும்,மெதுவடையும் கொடுக்கும் நபரிடம் கேட்டால் பாவம் அதுகள்...
உணவிற்கு என்ன செய்யும் ?...
இவர்களுக்கும் மரம்பிடுங்கி மாற்றிடத்தில் நடுகிற மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
கருணை என்கிற உணர்ச்சியின் காரணமாகவே இந்த செயல் நடக்கிறது....

ஆனால் இன்றைய நாளில், சீறும் கடலில் சிக்கிக் கொண்டிக்கும் நம்மைக் காப்பாற்ற ஓட்டைப் படகுகளால் ஒன்றும் செய்ய இயலாது.தொழில் புரட்சிங்கற பேர்ல தன்னைத்தானே தின்ன ஆரம்பிச்சிட்டோம்.இந்த நாகரீக கோமாளிகளின் தயவால் இந்த கிறுக்குப் புரட்சிக்கு அப்புறம் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு நாற்பத்தி நான்கு மடங்கு  அதிகரித்திருக்கிறது.அதுவும் கடந்த பத்தாண்டுகளில் இதன் வேகம் ராக்கெட் வேகம்...
இதே வேகத்தில் போனால் இன்னும் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஊரைவிட்டே அல்ல இந்த தகிக்கும் உலகைவிட்டே ஓடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்....
அதன் தீவிரதன்மையின் வெளிப்பாடுதான் அதிவெப்பம்,காலநிலைமாற்றம்.
மழையே பெய்வதில்லை...
அல்லது மிகுமழை...
பருவ மழையோடு அடைமழையை காணோம்...
காற்றெல்லாம் கரி....
இதையெல்லாம் சுத்தம் செய்வதுயார் ?

பூமிக்கு மரங்களே நுரையீரல்.அதுவே காற்றை சுத்தப் படுத்துகிறது. இந்த வேலையை எந்த தொழிற்சாலையிலும் செய்ய முடியாது....
33%காடுகள் கட்டாய அளவு ஆனால் இன்றைய நிலை 15%கீழாக போய்விட்டது...
நாம் செய்யும் தவறுகளால் அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு...

மரங்களை நடுவதுதான் அத்தனை மனிதர்களுக்கும் முழுநேர வேலையாக கட்டாயமாக்கவேண்டிய அவசர காலத்தில் இருக்கிறோம்...
இந்த எமர்ஜென்ஸி நேரத்தில் ஊரெல்லாம் சேர்ந்து ஒற்றை மரத்தை ஊனமாக்கி புகை கக்கும் பெரிய பெரிய இயந்திரங்களை வைத்து பிடுங்கி நட மாற்றிடம் தேடிக்கொண்டு...
செல்பிஎடுத்து நாளிதழில் படங்களை தேடும் வேலையில் இருக்கிறோம்...
ஒரு ஊரில் ஆரம்பித்தது இன்றைக்கு பல ஊர்களில் தவறான முன்னுதாரணமாக மாறிக்கொண்டிருக்கிறது...

பிடுங்கி நடுகின்ற ஆர்வலர்களிடம் கேட்டேன் "பிடுங்கி நடுவதில் உங்கள் நோக்கம் என்ன ?
பயன்கள் என்ன ?"-குழப்பத்துடனே பதில்வருகிறது...

நடப்படவேண்டியது குற்றுயிரும் குலை உயிருமான வேரும் கிளையும் வெட்டப்பட்ட ஒற்றை மரங்களல்ல.கோடிக்கணக்கான ஏக்கர்கள் பரப்பில் பலவிதமான புதிய மரங்களைத்தான்.பல புதிய காடுகளை உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.கொஞ்சமாக இருக்கிற ஆர்வலர்களும் ஊனமாக்கிய மரங்களை கிரேன்களில் தூக்கிக்கொண்டு அலைவதுதான் வேதனை...

உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் யோசித்து செயல்படுவோம்-பூமிப்பந்தில் வாழும் சூழலை உருவாக்குவோம்.
"செய்கிற செயலை பெரும் பயனுள்ளதாக்குவோம்"...

(இந்தப்படத்தை உருவாக்கிய அந்தப் பெயர் தெரியாத சிந்தனைக் கலைஞனுக்கும் இராகவன் சிவராமன் க்கும் நன்றிகள்)

நமது முகநூல் பதிவுகளுக்கு :
https://www.facebook.com/ramamurthi.ram.52

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...