Tuesday, 4 July 2017

விலங்குகளுக்கு அபாயம்

"விலங்குகளுக்கு அபாயம்"



மின்கம்பங்களில்
DANGER
அபாயம்
ప్రమాదం
खतरा
അപായം
ભય
ಅಪಾಯ....
இப்படி சிவப்பு எச்சரிக்கை பலகைகளை பார்த்திருப்போம்.

இங்குள்ள மனிதர்களில் பாதிப்பேரிற்குக் கூட இதைப் படித்து புரிந்து கொள்ள முடியாது.....

இதில் விலங்குகளின் நிலைதான் ஆகக் கொடுமை. அதற்கு எந்த எல்லையுமே இல்லாததால்,
அதற்கு ரோடு எது..,
விவசாயக் காடு எது..,
மின்கம்பம் எது..,
வேகமாக போகும் ரயிலோ..,
வாகனங்களையோ....
பிரித்து அறிகின்ற அறிவா இருக்கும்!...

மனிதர்களின் அபாய அறிவிப்புகளை அறிந்துகொள்ளுமளவு புத்திசாலியானவையா விலங்குகள்?...
அவைதான் நம்மைப்போல் படிக்கவில்லையே?!...

அவைகளை காக்கவேண்டுமென வாய்கிழிய கத்தும் அரசுகளின் திட்டம் ஆனால் அதை செயல்படுத்தும் அரசு இயந்திரங்களை இயக்கும் மனிதர்கள் அந்த அளவிற்கு சிந்திப்பதில்லை சிந்திக்குமளவிற்கு அவர்களும் இல்லை.அவர்களோ
அத்தியை வெட்டு..,
ஆளைவெட்டு...
என அறிவோடு பேசுகிறார்கள்...



இப்படியிருக்க நேற்று உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி உயிரை விட்டிருக்கிறது ஒரு சிறுத்தை.🐆🐆🐆 இந்தக்கொடுமை தெலுங்கானா வின் ஹைதராபாத்-நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லாரம் வனப்பகுதிக்கு அருகில் நடந்திருக்கிறது...

இவ்வளவு பெரிய சிறுத்தை எப்படி இந்த மின்கம்பத்தில் ஏறும் என கிராம மக்கள் கேள்வியெழுப்பி இருக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை அடித்த இரையை தூக்கிக்கொண்டு நன்றாக மரங்களில் ஏறும் சிறுத்தையால்.எதுவுமில்லாமல் மின்கம்பத்தின் மேலே ஏறுவது பெரிய விசயமில்லை.ஏற்கனவே கடந்த ஆண்டு குஜராத்தில் மயிலைத் துரத்திச்சென்ற சிறுத்தை மின்சார டிரானஸ்பார்மரில் ஏறி, எரிந்து உயிரை விட்டது உலகிற்கே தெரியும்.நமது பதிவிலும் இருக்கிறது...



இது போன்ற பல இடங்களில் பலமுறை பறவைகள்,கரடிகள்🐨🐒🐘🦍🦉🦅 உட்பட பல விலங்குகள் இறந்திருக்கின்றன.கடந்தவாரத்தில் மிகத்துயமான வகையில் கர்நாடக குடகு பகுதியில் வனத்தையொட்டிய காபித் தோட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஆறு யானைகளைப் பலி கொடுத்தோம்....



இப்படி எஞ்சியிருக்கிற குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்குகளை காப்பதற்காவது ,குறைந்தபட்ச திட்டமாக, விலங்குகள் நடமாடும் பகுதிகளிலாவது பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.விலங்குகளை பாதுகாக்க ஒதுக்கப்படும் பலகோடி ரூபாய்கள் என்னவாகின்றனவோ?!...

கேட்டால் ஆளாளாலிற்கு வேறுவேறு துறைகளை மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள்.நடக்கிற துயர சம்பவத்திற்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்கிற நிலையிலேயே விலகி நின்றுவிடுகிறார்கள்.இவர்கள் இப்படியிருக்க ஒன்இந்தியா வீடியோவைப் பாருங்கள் சிறுத்தைக்குப்(Leopard) பதிலாக இந்தியாவிலேயே இல்லாத சிவிங்கிப்புலியின்(cheetah)படத்தைப் போட்டு காமெடி பன்னுகிறான்.இதுபோன்ற ஊடகங்களுக்கு எப்போதுதான் பொறுப்பு வருமோ.இது எல்லாமே அறிவுப் பஞ்சத்தின் விளைவு...

ஒரு முடிவெடுத்து மனிதக்கவனக் குறைவால் நடக்கும் இதுபோன்ற இழப்புகளையாவது தவிர்க்கலாம்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

மேலும் அதிக விபரங்கள் மற்றும் கருத்துகளுக்கு எமது முகநூல்:
https://www.facebook.com/ramamurthi.ram.52

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...