"கும்பகோணம்"
எமது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத சம்பவங்களை துவக்கிவைத்த ஊர்.எனது ஊர் கோவைப்பகுதியாக இருந்தாலும் கும்பகோணத்திற்கும் எமக்கும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது எமது நண்பன் "காட்டூர் ராஜா" வினுடனான,இருபத்தியெட்டு ஆண்டுகால நெருங்கிய நட்புதான்
இது சாதாரண உறவல்ல, இருவர்குடும்பத்திற்குமான நெருங்கிய உறவு அது, என்பதில் எமக்கு மகிழ்ச்சியும் பெருமையும். சுகதுக்கங்கள் அனைத்திலும் இரு குடும்பமுமே பங்கெடுத்துக் கொள்வோம்.அப்படி ஒரு குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டு,உடனடியாக ஊர்திரும்பலாம் என்று இருக்கும்போது,இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம் அப்படியே பிச்சாவரம் அலையாத்திக் காடுகளை பார்க்கலாம் என திடீர் முடிவுசெய்து குடந்தையிலிருந்து சிதம்பரம் போகும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்துவிட்டு, இரவு தங்கலுக்கு சிதம்பரம் சென்றுவிட்டோம்.நான் சிதம்பரம் சென்றதை பலரிற்கு முகநூல்வழியாக மார்க் காட்டிக்கொடுத்துவிட்டார்.உடனடியாக பசுமை ஹாஜியிடமிருந்து மெசேஞ்சரில் தகவல் அது அப்படியே உங்களுக்கு...
"சார் சிதம்பரம் அருகே சற்று முன் வந்து சென்றீர்களா ?"
கொஞ்சம் தாமதமாக எமதுபதில்...
"வணக்கம் அய்யா நான் தற்போது சிதம்பரத்தில்தான் இருக்கிறேன்... :) "
"சிதம்பரத்திலிருந்து 17 Km. தான் எனது ஊர்.
போன் காண்பித்தது நீங்கள் சிதம்பரத்தில் இருப்பதாக!
சிதம்பரத்தில் எங்கு தங்கியுள்ளீர்கள் ,?
உங்களின் மொபைல் நம்பர் Pls...
....நான் சிதம்பரத்தில் இருந்து இப்பொழுதுதான் அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஊர் வந்தேன்"...
-இது பசுமை ஹாஜி.
இதற்குப்பிறகு எங்கள் உரையாடல் போன்மூலம் தொடர்ந்து அவருடைய அன்பையும் அழைப்பையும் தவிர்க்கவே முடியாமல்,அடுத்தநாள் மதியம் பிச்சாவரத்திலிருந்து பரங்கிப்பேட்டை சென்று....
எமது வாழ்வில் மறக்கமுடியாத நாளாக ஆக்கிவிட்டார். அவர் மட்டுமல்ல அந்த குடும்பமே எவ்வளவு அன்பான அக்கறையான குடும்பம் என சிறிது நேரத்தில் உணர்த்திவிட்டார்கள்.நேரில் அறிமுகம் இல்லாத ஒருவர் வீட்டிற்கா? அதுவும் மதிய உணவிற்கா ?.... வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து,
முடிந்தவரை அவர்வீட்டிற்குச் செல்வதை தவிர்த்துவிட்டு அவரைமட்டும் சந்தித்துவிட்டுச் சென்றுவிடலாம் என்றிருந்த எம்மையும் குறிப்பாக எமது மனைவி மகளையும் வழுக்கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்து விட்டார்...
போகாதிருந்திருந்தால் வாழ்வில் ஒரு அன்பான குடும்பத்தை சந்தித்த வாய்ப்பை இழந்திருப்போம்....
சரி போகிறோம் உடனடியாக கிளம்புகிறோம் என்றிருந்த எங்களது முடிவை அவர்களது அருமையான விருந்தும் பேச்சும் மாலைவரை அங்கேயே இருக்கச்செய்துவிட்டது.....
ஊரெங்கும் மரங்கள் குறிப்பாக பாதியளவு புங்கன் மரங்கள் மீதியுள்ளவை மற்ற நாட்டுமரங்களை காண முடிந்தது.வெறும் பேச்சு வெட்டிவேலை என உணர்ந்த ஹாஜி மாற்றம் தன்னிடமிருந்தே துவங்கவேண்டும் என முதலில் தமது வீட்டிற்கு அருகே மரங்களை நட ஆரம்பித்து,வீதியெங்கும் அந்த நற்காரியம் தொடர்ந்து பிறகு பக்கத்து தெருக்கள் என ஊரே இயங்கி இப்போது முழுவதுமாக மரங்கள்....
மரங்கள்...
வீடெங்கும் மரங்களைப் பாதுகாப்பதற்கான இரும்பு கூண்டுகளும்,கம்பிவலைகளும் இருப்பதைக் காண முடிந்தது.குடும்பத்தையும் குறிப்பாக வீட்டிலுள்ள குழந்தைகளையும் மரங்களின் காதலர்களாக,காவலர்களாக மாற்றி வைத்திருக்கிறார்...
இப்போது பக்கத்து ஊர்களுக்கெல்லாம் முடித்துவிட்டு சற்று தொலைவிலுள்ள ஊர்களிலும் இளைஞர்களை திரட்டி அங்கும் மரங்களின் அவசியம்பற்றி எடுத்துரைத்து மரங்களை நடுவதோடு மட்டுமல்லாமல் அதை பராமரிப்பதையும் வலியுறுத்தி கற்றுத்தருகிறது இவர்கள் குழு.இந்த நற்செயல்களுக்கு காரணமாக இருந்த முன்னோடிகளையும் இப்போது களத்தில் உதவிவருபவர்களையும் மறக்காமல் குறிப்பிட்ட ஹாஜி தன்னால் மட்டும் அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொன்னது, எமக்கு மிக மிக தன்னடக்கமாகவே பட்டது.....
பிறகு பேச்சு காடுகள்,விலங்குகள்,பறவைகள் அவற்றால் காடுவளர்ப்பு- பெருக்கம் என எங்கள் அனுபவங்களையும் மாறி மாறி பகிர்ந்துகொண்டு,புறப்பட மனமில்லாமலே புறப்பட்டோம் காரணம்,எங்களுக்குள் பேச இன்னும் நிறைய விசயங்கள் இருப்பதாகவே பட்டது.பேச்சு முற்றுப்பெறாமலேயே பரங்கிப்பேட்டையிலிருந்து எங்கள் பயணம் கோவையை நோக்கி பறப்படத் தயாரானது....
அவர் கொடுத்த பரங்கிப்பேட்டை ஹல்வா சுவை இன்றும் நாக்கில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.அதன் பெருமைகளையும் அவர் சொல்லத் தவறவில்லை...
இங்கும் #தாளிப்பனை:
சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....
அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...
தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...
இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....
இந்தப் பயணத்தை நல்ல அனுபவமாக்கிய சகோதரர் பசுமை ஹாஜி அவர்களுக்கும்,முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என அன்பை வருத்தமாக வெளிப்படுத்திய தம்பி Stepan Edbark க்கும்.விழுப்பரம் அங்கிருந்து பக்கம் தான் வந்துவிட்டுச் செல்லுங்கள்.என அன்புக் கட்டளையிட்ட சகோதரர் Swaminathan Sellasundaram க்கும், நன்றிகளையும் அன்பையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்...
என்றும் சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
மேலும் இதுபற்றிய தகவல்கள்,கருத்துகளைக் காண,
https://m.facebook.com/story.php?story_fbid=1332210333561665&id=100003181323647
எமது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத சம்பவங்களை துவக்கிவைத்த ஊர்.எனது ஊர் கோவைப்பகுதியாக இருந்தாலும் கும்பகோணத்திற்கும் எமக்கும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது எமது நண்பன் "காட்டூர் ராஜா" வினுடனான,இருபத்தியெட்டு ஆண்டுகால நெருங்கிய நட்புதான்
இது சாதாரண உறவல்ல, இருவர்குடும்பத்திற்குமான நெருங்கிய உறவு அது, என்பதில் எமக்கு மகிழ்ச்சியும் பெருமையும். சுகதுக்கங்கள் அனைத்திலும் இரு குடும்பமுமே பங்கெடுத்துக் கொள்வோம்.அப்படி ஒரு குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டு,உடனடியாக ஊர்திரும்பலாம் என்று இருக்கும்போது,இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம் அப்படியே பிச்சாவரம் அலையாத்திக் காடுகளை பார்க்கலாம் என திடீர் முடிவுசெய்து குடந்தையிலிருந்து சிதம்பரம் போகும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்துவிட்டு, இரவு தங்கலுக்கு சிதம்பரம் சென்றுவிட்டோம்.நான் சிதம்பரம் சென்றதை பலரிற்கு முகநூல்வழியாக மார்க் காட்டிக்கொடுத்துவிட்டார்.உடனடியாக பசுமை ஹாஜியிடமிருந்து மெசேஞ்சரில் தகவல் அது அப்படியே உங்களுக்கு...
"சார் சிதம்பரம் அருகே சற்று முன் வந்து சென்றீர்களா ?"
கொஞ்சம் தாமதமாக எமதுபதில்...
"வணக்கம் அய்யா நான் தற்போது சிதம்பரத்தில்தான் இருக்கிறேன்... :) "
"சிதம்பரத்திலிருந்து 17 Km. தான் எனது ஊர்.
போன் காண்பித்தது நீங்கள் சிதம்பரத்தில் இருப்பதாக!
சிதம்பரத்தில் எங்கு தங்கியுள்ளீர்கள் ,?
உங்களின் மொபைல் நம்பர் Pls...
....நான் சிதம்பரத்தில் இருந்து இப்பொழுதுதான் அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஊர் வந்தேன்"...
-இது பசுமை ஹாஜி.
இதற்குப்பிறகு எங்கள் உரையாடல் போன்மூலம் தொடர்ந்து அவருடைய அன்பையும் அழைப்பையும் தவிர்க்கவே முடியாமல்,அடுத்தநாள் மதியம் பிச்சாவரத்திலிருந்து பரங்கிப்பேட்டை சென்று....
எமது வாழ்வில் மறக்கமுடியாத நாளாக ஆக்கிவிட்டார். அவர் மட்டுமல்ல அந்த குடும்பமே எவ்வளவு அன்பான அக்கறையான குடும்பம் என சிறிது நேரத்தில் உணர்த்திவிட்டார்கள்.நேரில் அறிமுகம் இல்லாத ஒருவர் வீட்டிற்கா? அதுவும் மதிய உணவிற்கா ?.... வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து,
முடிந்தவரை அவர்வீட்டிற்குச் செல்வதை தவிர்த்துவிட்டு அவரைமட்டும் சந்தித்துவிட்டுச் சென்றுவிடலாம் என்றிருந்த எம்மையும் குறிப்பாக எமது மனைவி மகளையும் வழுக்கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்து விட்டார்...
போகாதிருந்திருந்தால் வாழ்வில் ஒரு அன்பான குடும்பத்தை சந்தித்த வாய்ப்பை இழந்திருப்போம்....
சரி போகிறோம் உடனடியாக கிளம்புகிறோம் என்றிருந்த எங்களது முடிவை அவர்களது அருமையான விருந்தும் பேச்சும் மாலைவரை அங்கேயே இருக்கச்செய்துவிட்டது.....
ஊரெங்கும் மரங்கள் குறிப்பாக பாதியளவு புங்கன் மரங்கள் மீதியுள்ளவை மற்ற நாட்டுமரங்களை காண முடிந்தது.வெறும் பேச்சு வெட்டிவேலை என உணர்ந்த ஹாஜி மாற்றம் தன்னிடமிருந்தே துவங்கவேண்டும் என முதலில் தமது வீட்டிற்கு அருகே மரங்களை நட ஆரம்பித்து,வீதியெங்கும் அந்த நற்காரியம் தொடர்ந்து பிறகு பக்கத்து தெருக்கள் என ஊரே இயங்கி இப்போது முழுவதுமாக மரங்கள்....
மரங்கள்...
வீடெங்கும் மரங்களைப் பாதுகாப்பதற்கான இரும்பு கூண்டுகளும்,கம்பிவலைகளும் இருப்பதைக் காண முடிந்தது.குடும்பத்தையும் குறிப்பாக வீட்டிலுள்ள குழந்தைகளையும் மரங்களின் காதலர்களாக,காவலர்களாக மாற்றி வைத்திருக்கிறார்...
இப்போது பக்கத்து ஊர்களுக்கெல்லாம் முடித்துவிட்டு சற்று தொலைவிலுள்ள ஊர்களிலும் இளைஞர்களை திரட்டி அங்கும் மரங்களின் அவசியம்பற்றி எடுத்துரைத்து மரங்களை நடுவதோடு மட்டுமல்லாமல் அதை பராமரிப்பதையும் வலியுறுத்தி கற்றுத்தருகிறது இவர்கள் குழு.இந்த நற்செயல்களுக்கு காரணமாக இருந்த முன்னோடிகளையும் இப்போது களத்தில் உதவிவருபவர்களையும் மறக்காமல் குறிப்பிட்ட ஹாஜி தன்னால் மட்டும் அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொன்னது, எமக்கு மிக மிக தன்னடக்கமாகவே பட்டது.....
பிறகு பேச்சு காடுகள்,விலங்குகள்,பறவைகள் அவற்றால் காடுவளர்ப்பு- பெருக்கம் என எங்கள் அனுபவங்களையும் மாறி மாறி பகிர்ந்துகொண்டு,புறப்பட மனமில்லாமலே புறப்பட்டோம் காரணம்,எங்களுக்குள் பேச இன்னும் நிறைய விசயங்கள் இருப்பதாகவே பட்டது.பேச்சு முற்றுப்பெறாமலேயே பரங்கிப்பேட்டையிலிருந்து எங்கள் பயணம் கோவையை நோக்கி பறப்படத் தயாரானது....
அவர் கொடுத்த பரங்கிப்பேட்டை ஹல்வா சுவை இன்றும் நாக்கில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.அதன் பெருமைகளையும் அவர் சொல்லத் தவறவில்லை...
இங்கும் #தாளிப்பனை:
சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....
அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...
தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...
இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....
இந்தப் பயணத்தை நல்ல அனுபவமாக்கிய சகோதரர் பசுமை ஹாஜி அவர்களுக்கும்,முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என அன்பை வருத்தமாக வெளிப்படுத்திய தம்பி Stepan Edbark க்கும்.விழுப்பரம் அங்கிருந்து பக்கம் தான் வந்துவிட்டுச் செல்லுங்கள்.என அன்புக் கட்டளையிட்ட சகோதரர் Swaminathan Sellasundaram க்கும், நன்றிகளையும் அன்பையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்...
என்றும் சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
மேலும் இதுபற்றிய தகவல்கள்,கருத்துகளைக் காண,
https://m.facebook.com/story.php?story_fbid=1332210333561665&id=100003181323647
No comments:
Post a Comment