Monday, 17 April 2017

ஆந்தைகளுக்கு (Owls) நன்றி செலுத்துவோம்...

ஆந்தைகளுக்கு (Owls)
நன்றி செலுத்துவோம்...

(உருவம் என்றும் நிலையில்லாதது.,செய்கிற செயல்தான் என்றும் இந்த பூமிஉள்ளவரை நிலைக்கும்)

"கோட்டான் கத்தினா சாவு நடக்கும்"- அதுவும் எந்தவீட்டிற்கு அருகிலிருந்து அலறுகிறதோ அந்த வீட்டு வயசானவங்க பாடையில ஏத்தற அளவில  கிராமத்துல பேசுவாங்க.,அதனாலேயே இதற்கு "சாவுக்குருவி" ன்னு இன்னொரு பேரு.,
எங்கவீட்டுக்கு அருகில் கத்தும்போது எமக்கு சாவுபயம் எட்டிப்பார்க்கும்பாருங்க. அத நெனச்சா இப்ப சிரிப்பாவருது...



"ஏண்டா கூகையாட்ட முழிச்சிட்டிருக்கிறே ?"- இது ஒரு வசவுச்சொல்....
இந்தமாதிரி இந்த உலகம் பூராவுமே பல நாடுகளில் ஆந்தைமீது ஒரு பீதியக் கிளப்பும் அறிவாளி மனிதர்கள் இருந்துகொண்டேதான் இருந்திருக்கிறார்கள்.அதற்கு அதன் செயல்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம்...

மனிதர்களைப் போன்றே தட்டையான முகத்தில் இமைக்காத கண்கள்மூலம் நீண்ட நேரம் தீவிரமாக உத்ற்றுப் பார்க்கும் தன்மை.உடலைத்திருப்பாமல் பின்பக்கமுள்ளவற்றையும் தலையை மட்டும் முழுவதும் திருகி(திருப்பி)ப்பார்க்கும் அமைப்பு(270டிகிரி கோணம்வரை)இரவில் மட்டும் நடமாட்டம். நிசப்தமான இரவில் இடைவிடாத அலறல் இதுவெல்லாம் அரவமற்ற சூழலில் வாழ்ந்த அந்தக்கால மனிதர்களுக்கு இனம்புரியாத அச்சத்தையும் ஆந்தைகளின்மீது வெறுப்பையும் உண்டாக்கியிருக்கலாம்.காரணமே இல்லாமல் ஆந்தையை எங்கு கண்டாலும், மனிதர்களை கொல்லவருபவனை அடித்துக்கொல்லும் ரேஞ்சில், கூட்டமாக வெறியோடு கொல்வதை நேரில் பார்த்திருக்கிறேன்....

உயிர்ச்சூழலை சமன்படுத்த இயற்கை ஒவ்வொரு உயிர்களையும் உலகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தட்பவெப்ப புவியமைப்பிற்கேற்ப ஏற்படுத்தியிருக்கிறது.அப்படி வலுவான காரணத்திற்காக, இந்த பூமியில் மனிதர்களுக்கு முன்னரே உருவானதுதான. இந்த ஆந்தைகள் ஆக மனிதனுக்கு முன்னரே உருவானதால் ஆந்தைகள் மனிதர்களைக் கொள்ள படைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...

ஆந்தை அலறுவது அதன் இணையை ஈர்த்து குடும்பம்நடத்ததானே தவிர மனிதர்களின் மரண அறிவிப்பிற்கில்லை.இங்கு இப்படியிருக்க வட நாட்டில் ஒருசில பகுதிகளில், ஆந்தையை மகாலட்சுமியின் வாகனமாகவும்.,அது எந்தவீட்டில் அமர்ந்து அலறுகிறதோ அந்த வீட்டிற்கு நல்ல செய்தியை சொல்லவந்த தூதுவனாகவும் மதிக்கிறார்கள்.சில நாடுகளில் இதை ஒரு அறிவிற்கானகுறியீடாக வைத்திருக்கிறார்கள்.அதனால் பல பலகளைக்கழக சின்னங்களில் ஆந்தை இடம்பெற்றிருக்கிறது.கிரேக்க தேவதை அதீனாவின் சின்னம் ஆந்தை. அந்த நாட்டுத் தபால் தலைகளிலும், பழைய நாணயங்களிலும் ஆந்தையை வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்...

வடமாநிலங்களில் பலபகுதிகளில் ஏவல்,பில்லி,சூனியம் போன்ற அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மந்திரதந்திர வேலைகளில் ஆந்தைகளை பலியிட்டும் ஒவ்வொரு செயலுக்கும் ஆந்தைகளின் ஒவ்வொரு உடல்பாகத்தைப் பயன்படுத்தும் ஏமாற்றுப்பேர்வழிகளும் அவற்றை நம்பி பணத்தையிழக்கும் எளியமனிதர்கள் மட்டுமல்ல பெரிய அரசியல் பிரபலங்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை....

இந்தமாதிரி செயல்களுக்கு வடமாநில கிராமங்களில் பதினைந்திற்கு மேலான வகைகளை பிடித்து ஆந்தைவியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.ஒரு ஆந்தை அதன் வகையைப் பொறுத்து ரூபாய் ஐந்தாயிரத்திற்கு மேல் விற்கப்படுகிறது...

1972 ம் ஆண்டின் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் ஆந்தைவேட்டையும் வியாபாரமும் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் வடிந்தி கிராமங்களில் இதை தடுப்பது சிரமம் தான் அவர்கள் புலி,சிறுத்தைகளைக்கூட அடித்துக்கொள்ள அஞ்சுவதில்லையே....

உண்மையில் ஆந்தை நமக்கு நண்பன் எப்படித் தெரியுமா?...
வயல்களிலும் உணவுக் கிடங்குகளிலும் உணவுப் பொருட்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பது
எலிகள். எலிகளால் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5-10 சதவிகிதம் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஓர் ஆண்டுக்கு எலிகளினால் 20 மெட்ரிக் டன் அளவு வயலிலும், 33 மெட்ரிக் டன் அளவு சேமிப்பு கிடங்குகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
எலி ஒரு ஆண்டில் ஐந்து ஆறு முறை குட்டிகள் போடும், ஒவ்வொரு முறையும்
சுமார் பத்துப் பன்னிரெண்டு குட்டிகளைப்போட்டுத் தள்ளுகிறது...

ஒரு ஜோடி எலிகள் அதன் ஆயுற்காலத்தில சுமாராக 500 முதல் 2000 வரையாக உருவாகுமாம். இப்படி
அளவுக்கு அதிகமாக பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது
அவற்றைத்தின்னும் ஆந்தைகளும் பாம்புகளும் தான். எலிகளின் எண்ணிக்கை
கட்டுப்பாடற்று பெருகும். எலிகள் தானியங்களுக்கு சேதம் விளைவிப்பதோடல்லாமல்  ஆட்கொல்லி நோய்களான ப்ளேக், லெப்டொ ஸ்பிரோஸிஸ்
இவற்றையம் பரப்புகிறது.இப்போது புரிகிறதா ஆந்தையை ஏன் இயற்கை உருவாக்கியதென்று?

இந்த ஆந்தை தன் குஞ்சுக்கு என்ன இரை கொடுக்கிறது என்று தெரியுமா ? அப்படியே ஒரு முழு எலி. ஒரு குஞ்சு ஒரு இரவில் ஒன்றிலிருந்து இரண்டு எலிகளைத்
தின்னும் அதேசமயம் ஒருஆந்தையானது ஒரு இரவில் நான்கு எலிகளுக்குமேல் தின்னும்.ஆந்தை இரவில் இரை தேடும் பறவை இனம்.எலியும் இரவில் நடமாடக்கூடியது...

தொலைவில் உள்ள இரையைக்கூட ஆந்தைகளால் தெளிவாகப் பார்க்க முடியும்.ஆனால் அருகிலிப்பதைப் பார்க்க சிரமப்படுமாம்.

ஆந்தைகள் பூச்சிகளையும் சிறிய பிராணிகளையும் உணவாக உட்கொள்ளும். சில ஆந்தை வகைகள் மீன்களையும் வேட்டையாடி உண்ணும்.ஆந்தைகளின் வலுவான நகங்கள் இரையைப் பிடிக்கவும் கொல்லவும் உதவியாக உள்ளன...

அண்டார்க்டிகா தவிர மற்ற எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள் உள்ளன.

ஆந்தையின் காதுகள் இரண்டும் வேறு வேறு அளவுகளில் இருக்கும். ஆந்தைகளுக்குக் கேட்கும் திறன் அதிகம்.

ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியாவிட்டாலும் இரை எழுப்பும் ஒலி மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன. ஒன்றை மூடித் திறக்கவும், மற்றொன்றைத் தூங்குவதற்கும், இன்னொன்றைக் கண்ணை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.

நிறைய ஆந்தைகளுக்குத் தலையில் காது மடல்கள் கொம்புகள் போல அமைந்திருக்கும். ஆனால், அவை காதுகள் அல்ல. கொம்பு என்று அழைக்கப்பட்டாலும் அது சிறகுதான்.

ஆந்தைகள் பகலில் தூங்கி இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் பறவைகள்.
அதற்கேற்றபடி அவற்றின் கண் பார்வை அமாவாசை இரவிலும் துல்லியமாகத்
தெரியும்.

பெரியவகைகளில் நான்கரை கிலோ எடைவரை இருக்கும்.
ஆந்தைகளின் இறக்கையில் உள்ள இறகுகள் மிக மிக மிருதுவானவை. அதனால் அவை
பறக்கும் போது சத்தமே உண்டாகாது. அதனால் இரைஉயிரிகளை ஆந்தை நெருங்கும் வரை இரையால் உணரமுடியாது!..

ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் எலிகள் வரை பிடித்துத் தின்னும்...
சூழலியல் தேடலுடன்:
Ramamurthi Ram

இவ்வளவு நன்மைகளை இந்த மனிதர்களுக்கு செய்யும்
ஆந்தைகளை போற்றி அவற்றின் வாழிடங்களை சிதைக்காமல் பாதுகாக்கனுமா ? இல்லையா???
சொல்லுங்கள்.....

இதேபோன்ற சூழலியல் சார்ந்த பதிவுகளை எமதுமுகநூலில்காண:
https://www.facebook.com/ramamurthi.ram.52

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...