மரங்களின் இடமாற்றம் மரங்களிற்கு தடுமாற்றமா ?
சமீபகாலமாக மிக அதிக அளவில் இயற்கை ஆர்வலர்களால் பல ஆண்டுகள் வளர்ந்த முதிய மரங்களை மறுநடவு செய்யப்படுகிறது.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தயவு செய்து மரங்களைப் பற்றி அறிந்த வல்லுனர்களும்,அனுபவசாலிகளும்,மரங்களின்மீது ஆர்வமுடையவர்களும் கருத்துகளை சொல்லவும்.இதுபற்றிய எமது பார்வைகூட தவறாக இருக்கலாம்.ஆகவே இந்தப் பதிவினைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதுபற்றிய கருத்தினைக் கூறினால் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு உங்கள் கருத்து தொடக்கப்புள்ளியாக்கூட அமையலாம்...
எனக்குத் தெரிந்த அளவில், கடந்த ஆண்டில் இந்தியாவில் நமது தமிழ்நாட்டில் குன்னத்தூர் கோபி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான முப்பத்தி மூன்று புளிய மரங்களை இந்த மாதிரி மறுநடவு செய்யவதை பார்த்தேன்...
இப்படி ஊடகங்களால் பாராட்டியும் வியத்தும், இந்தமாதிரி மாற்றிடத்தில் மரங்களை பிடிங்கிநட்ட செயல்கள் கோவையிலும் அதைத்தொடர்ந்து பல இடங்களிலும் நடந்த இந்த செயல்,இரண்டு நாட்களுக்கு முன்னர் அவினாசியில் எமது நண்பர்களால் ஒரு அரசமரம் இடம்மாற்றி நட்டசெயல்.,எம்மை இப்போது பதிவிடத் தூண்டியது...
மரங்களின் மீதான பார்வையில் ஒரு விழிப்புணர்வும் எதிகாலத்தில் மரங்களின் தேவைகுறித்த அக்கறையும் இதில் தெரிவதைப்பார்த்து மிகமகிழ்ச்சியடைத்தாலும்,ஒருசிலவற்றையும் மனசினுள் சிந்திக்க வைக்கிறது...
இப்படி வயதான மரங்களை நடுவதென்பது..,
அதிக முயற்சி...
அதிக வேலைப்பளு...
அதிக செலவு...
அதிக பராமரிப்பு...
அதோடு மரம் துளிர்க்காவிட்டால் வீண்முயற்சியாக கூட ஆகிவிடும்...
ஆனால் இதுபோன்ற முயற்சியில் பாதிக்கும் குறைவான செலவில் அதிக அளவிலான மரங்களை உருவாக்கிடலாம்...
அதுவும் நன்கு வளர்ந்த ஆறடி செடிகளை நட்டு சிறிதுகாலம் பராமரித்தாலேபோதும் இதைவிட அதிக அளவில் மரங்களை உற்பத்தி செய்யலாம்...
அதுவுமில்லாமல் வயது முதிர்ந்த மரங்கள் எவ்வளவுகாலம் இந்த மண்ணில் நிலைத்துநிற்கும் என சொல்ல முடியாது.அதே நேரத்தில் சில மரவகைகளின் போத்துகளை நடுவதன் மூலம் விரைவாக மரங்களை உருவாக்கிட முடியும்.ஒரே மரத்தின் நீண்ட கிளைகளால் சில மரங்களை உருவாக்கிடலாம்...
மரங்கள் சாலை விரிவாக்கத்தின்போதும்,மின்பாதைகள் அமைக்கும்போதுமே அதிக அளவில் வெட்டப்படுகின்றன அரசாங்கம் இதை மனதில் கொண்டு சாலைகளை மரங்களை வெட்டாமல்கூட மாற்றி அமைக்கலாம்.சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் முனைப்புக் காட்டும் அரசு.இருக்கிற மரங்களை வெட்டாமலும் பிடுங்காமலும் இருக்க புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கலாம்.மிச்சமிருப்பவைகளையாவது இனி தக்க வைக்கலாம்.ஆனால் அரசாங்கமே இந்த மரமழிக்கும் வேலைகளை செய்யாமலிருக்க வேண்டும்...
முன்பல்லாம் மக்களுக்குத்தான் இதுபற்றி அக்கறை இருக்காது.ஆனால் இப்போது மக்களுக்கு அக்கறை அதிகமாகிவிட்டது.அதன் விளைவுதான் மக்களே உழைப்பையும் பணத்தையும் செலவுசெய்து குளங்களையும் நீர்வழிப்பாதைகளையும் சீரமைப்பதோடு,இதுமாதிரி மரங்களை மாற்றிடத்தில் நடும் நிகழ்வுகளையும் செய்கிறார்கள். நாட்டைச் சீரமைக டாஸ்மாக் கடைகளை அடித்துநொறுக்கி சீரமைப்பதையும் பார்த்து வருகிறோம்.அரசு செயல்படாதபோது மக்கள் செயல்படுவது மிகப்பெரிய மாற்றம்....
புதியநம்பிக்கை எட்டிப்பார்க்கிறது...
அக்கறையுடன்.,
Ramamurthi Ram
மரங்களை இடமாற்றி நடுவதுபற்றிய பலரது கருத்துப் பரிமாற்றங்களை எமது முகநூல்பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=1269510503164982&id=100003181323647
சமீபகாலமாக மிக அதிக அளவில் இயற்கை ஆர்வலர்களால் பல ஆண்டுகள் வளர்ந்த முதிய மரங்களை மறுநடவு செய்யப்படுகிறது.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தயவு செய்து மரங்களைப் பற்றி அறிந்த வல்லுனர்களும்,அனுபவசாலிகளும்,மரங்களின்மீது ஆர்வமுடையவர்களும் கருத்துகளை சொல்லவும்.இதுபற்றிய எமது பார்வைகூட தவறாக இருக்கலாம்.ஆகவே இந்தப் பதிவினைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதுபற்றிய கருத்தினைக் கூறினால் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு உங்கள் கருத்து தொடக்கப்புள்ளியாக்கூட அமையலாம்...
எனக்குத் தெரிந்த அளவில், கடந்த ஆண்டில் இந்தியாவில் நமது தமிழ்நாட்டில் குன்னத்தூர் கோபி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான முப்பத்தி மூன்று புளிய மரங்களை இந்த மாதிரி மறுநடவு செய்யவதை பார்த்தேன்...
இப்படி ஊடகங்களால் பாராட்டியும் வியத்தும், இந்தமாதிரி மாற்றிடத்தில் மரங்களை பிடிங்கிநட்ட செயல்கள் கோவையிலும் அதைத்தொடர்ந்து பல இடங்களிலும் நடந்த இந்த செயல்,இரண்டு நாட்களுக்கு முன்னர் அவினாசியில் எமது நண்பர்களால் ஒரு அரசமரம் இடம்மாற்றி நட்டசெயல்.,எம்மை இப்போது பதிவிடத் தூண்டியது...
மரங்களின் மீதான பார்வையில் ஒரு விழிப்புணர்வும் எதிகாலத்தில் மரங்களின் தேவைகுறித்த அக்கறையும் இதில் தெரிவதைப்பார்த்து மிகமகிழ்ச்சியடைத்தாலும்,ஒருசிலவற்றையும் மனசினுள் சிந்திக்க வைக்கிறது...
இப்படி வயதான மரங்களை நடுவதென்பது..,
அதிக முயற்சி...
அதிக வேலைப்பளு...
அதிக செலவு...
அதிக பராமரிப்பு...
அதோடு மரம் துளிர்க்காவிட்டால் வீண்முயற்சியாக கூட ஆகிவிடும்...
ஆனால் இதுபோன்ற முயற்சியில் பாதிக்கும் குறைவான செலவில் அதிக அளவிலான மரங்களை உருவாக்கிடலாம்...
அதுவும் நன்கு வளர்ந்த ஆறடி செடிகளை நட்டு சிறிதுகாலம் பராமரித்தாலேபோதும் இதைவிட அதிக அளவில் மரங்களை உற்பத்தி செய்யலாம்...
அதுவுமில்லாமல் வயது முதிர்ந்த மரங்கள் எவ்வளவுகாலம் இந்த மண்ணில் நிலைத்துநிற்கும் என சொல்ல முடியாது.அதே நேரத்தில் சில மரவகைகளின் போத்துகளை நடுவதன் மூலம் விரைவாக மரங்களை உருவாக்கிட முடியும்.ஒரே மரத்தின் நீண்ட கிளைகளால் சில மரங்களை உருவாக்கிடலாம்...
மரங்கள் சாலை விரிவாக்கத்தின்போதும்,மின்பாதைகள் அமைக்கும்போதுமே அதிக அளவில் வெட்டப்படுகின்றன அரசாங்கம் இதை மனதில் கொண்டு சாலைகளை மரங்களை வெட்டாமல்கூட மாற்றி அமைக்கலாம்.சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் முனைப்புக் காட்டும் அரசு.இருக்கிற மரங்களை வெட்டாமலும் பிடுங்காமலும் இருக்க புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கலாம்.மிச்சமிருப்பவைகளையாவது இனி தக்க வைக்கலாம்.ஆனால் அரசாங்கமே இந்த மரமழிக்கும் வேலைகளை செய்யாமலிருக்க வேண்டும்...
முன்பல்லாம் மக்களுக்குத்தான் இதுபற்றி அக்கறை இருக்காது.ஆனால் இப்போது மக்களுக்கு அக்கறை அதிகமாகிவிட்டது.அதன் விளைவுதான் மக்களே உழைப்பையும் பணத்தையும் செலவுசெய்து குளங்களையும் நீர்வழிப்பாதைகளையும் சீரமைப்பதோடு,இதுமாதிரி மரங்களை மாற்றிடத்தில் நடும் நிகழ்வுகளையும் செய்கிறார்கள். நாட்டைச் சீரமைக டாஸ்மாக் கடைகளை அடித்துநொறுக்கி சீரமைப்பதையும் பார்த்து வருகிறோம்.அரசு செயல்படாதபோது மக்கள் செயல்படுவது மிகப்பெரிய மாற்றம்....
புதியநம்பிக்கை எட்டிப்பார்க்கிறது...
அக்கறையுடன்.,
Ramamurthi Ram
மரங்களை இடமாற்றி நடுவதுபற்றிய பலரது கருத்துப் பரிமாற்றங்களை எமது முகநூல்பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=1269510503164982&id=100003181323647
No comments:
Post a Comment