Miss you legend....
Prince of bandhipur...
வருந்துகிறோம்....
"பிரின்ஸ் " - இந்தப் பெயர் பந்திப்பூர்-கர்நாடக காட்டிற்கு வழக்கமாகச் செல்பவர்களுக்கும் கானுயிர் ஆர்வலர்களுக்கும் ஒரு அதிர்வலையை உண்டாக்கும்....
"பிரின்ஸ்"- இப்போது நம்மிடையே இல்லை என அதிகாரமற்ற செய்திகள் வருவது பலருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது...
இது உண்மையாக இருக்கவே கூடாது.அப்படி உண்மையாக இருந்தால், PRINCE உன் மரணம் இவ்வளவு மோசமாக இருந்திருக்கக்கவே கூடாது.
ஒரு அனாதையைப்போல்...
நீ காட்டிற்குள் வாழ்ந்திருக்கலாம் ஆனால் உலகம் முழுவதிலும் உன்மேல் அன்பும்,காதலும்,ஆவலும் வைத்திருப்போர் எத்தனைபேர் என எனக்குத் தெரியும்.இந்த செய்திகேட்டு அழுதவர்கள் பலரைப் பற்றி நான் அறிவேன்.அவர்களின் ஆதங்கம்,காட்டிற்குள் இறந்து ஒருவாரத்திற்கும் மேலாகி கிடைத்த புலி நீயாக இருக்கக்கூடாது என்பதே...
உண்மையாக நீ இறந்து உனது இறுதிச்சடங்கு அறிவிப்பு கொடுத்திருந்தால் அங்கு எவ்வளவு கூட்டம் கூடியிருக்கும் என்பதை நாங்கள் உணர்வோம்.உண்மையாக இருக்கும் பட்சத்தில் உன்மரணம் மரியாதை கொடுக்கப்படாமலேயே போனது அனைவருக்கும் வருத்தமே...
மூன்றுவருடங்கள் நீண்டநாள் தேடலில் முதல்முறை ஒருசில நொடிகள் மட்டுமே என்னால் உன்னைப் பார்க்க முடிந்தது. ஆனால் கடந்த பொங்கல் நாளன்று இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக "கொளக்குமல்லி கட்டே"வில் உம்மோடு இருந்த நாளை எம்மால் மறக்கவே முடியாது.அன்று நவரசங்களையும் காட்டிவிட்டாய் எங்களது தீவிர ஆவலுக்கு நீ தீனிபோட்டதாகவே அன்று தோன்றியது. எங்களது மனஓட்டத்தை புரிந்து கொண்டு, எங்களை அன்று காட்டிற்கு வரவழைத்ததாகவே தோன்றியது எனக்கு, எங்களுக்கு அன்று முழு நிறைவு.அதுவே நீ மனிதர்களின் கண்ணில் பட்ட கடைசிநாளாக சொல்கிறார்கள்...
நீ அந்தக் காட்டின் அரசன்தான்.அப்படி மக்கள் அழைப்பதில் தவறில்லை புலிகளின் இயல்பிற்கு மாறுபட்ட இயல்புடைய உம்மை அப்படி அழைக்கலாம்தான். இனி நீ இல்லாவிட்டால் அந்த இடத்தை யார் நிறைவு செய்வார்கள் ?....
பொதுவாக பெரும்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகள் மிகுந்த கூச்ச உணர்வு உடையவை.அதாவது மனிதர்களிடமிருந்து விலகியே இருக்கும்....
மத்தியப் பிரதேசமாநிலம் பாந்தவகார் தேசியபூங்காவில் சார்ஜர் என்கிற புகழ்பெற்றபுலி. அது யாரைப்பார்த்தாலும் எதைப்பார்த்தாலும் உறுமிக்கொண்டு விரட்டியடிக்க ஆரம்பிக்கும்,பயமுறுத்தி தாக்குவதற்கு துரத்தும் அது காட்டிற்குள் செல்லும் சஃபாரி வாகனங்களாக இருந்தாலும் சரி மற்ற விலங்குகளாக இருந்தாலும் சரி.அதனாலேயே அந்தப்புலிக்கு Charger என்கிற பெயர் வந்தது. ஆனால் இந்த பிரின்ஸின் குணம் முற்றிலும் அதற்கு மாறுபட்டது என்பார்கள்.2009 ம் ஆண்டுவாக்கில் இதை முதலில் பார்த்ததாக கூறப்படுகிறது.அப்போது முதல் இப்போதுவரை அடிக்கடி மனிதர்கள் கண்ணில் படும்போதெல்லாம் இது பதட்டமோ,பயமோ இல்லாமல் ஏன் மனிதர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.இதன் இந்த குணத்தாலேயே தென்னிந்தியாவில், அதுவும் இந்தியாவிலேயே அதிகப்புலிகள் உள்ள ஒரு காட்டில், இதுமட்டுமே மிகப்புகழ்பெற்றதற்கு காரணம்.தென்னிந்திய புலிகளில் மிக அதிகமாக புகைப்படம் எடுத்தது இதைத்தான்.
ஒரு ஆண்புலிகளின் வாழிட எல்லை சுமார் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவாக இருக்கும். ஆனால் இதன் ஆளுகை எல்லை சுமார் என்பது கி.மீ பரப்பளவாக பார்த்துக்கொண்டு அந்த எல்லைக்குள் அதாவது மூன்று ஆண்புலிகள் வாழும் காட்டின் பரப்பளவில் எந்த ஆண்புலியையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டதுகூட இதற்கு இவ்வளவு பெயரையும் புகழையும் கொடுத்திருக்கலாம்.மனிதக்குடியிருப்புகளுக்கு அருகிலேயே இதன் வாழிடப்பரப்பு இருந்தாலும் இதுவரை எந்தவிதத்திலும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.அடிக்கடி சுற்றுலாவாசிகளையும் வன ஊழியர்களையும் கண்டும் காணாமலுமே கடந்து சென்றிருக்கிறது...
"கௌரி" பத்துவருடங்களுக்கு முன்னர் பந்திப்பூரில் இதே குணங்களோடு இருந்த பெண்புலி. "அகஸ்தியா" அப்போது 14-16 வயதான ஆண்புலி இந்த இரண்டிற்கும் பிறந்ததுதான் பிரின்ஸ் என்கிறார்கள் இது தனது தாயின் குணத்திலேயே இருப்பதாகச் சொல்கிறார்கள்.இதற்கு இப்போதைய வயது 14-15 ஆக இருக்கலாம்....
தமது வாழ்நாளில் தமது வாழிட எல்லைக்குள் வந்த பல ஆண்புலிகளை விரட்டியடித்து கொன்றதாக இதைப்பற்றி சொல்கிறார்கள் நான் இதை இறுதியாக பார்த்த கடந்த ஜனவரிக்கு முன் நடந்த சண்டையில் ஒரு ஆண்புலியின் காலை உடைத்துவிட்டதாம் நான் பார்க்கும்போது இதன் வாயருகில் சிறிய காயம் இருந்தது...
இந்தக்காட்டை ஆள இதன்வாரிசான சுல்தான் என்கிற "பசவனகட்டே" மேல்(Male)இப்போது வந்துவிட்டதாக சொல்கிறார்கள் இதனோடும் சண்டையிட்டிருக்கிறது பிரின்ஸ்.எமக்குத் தெரிந்து இதைப்பார்க்காமல் ஏக்கத்திலிருக்கும் புகைப்படக்காரர்களே மிக அதிகம் அவர்களுக்காகவாவது நீ மீண்டும் வா...
Prince of bandhipur...
வருந்துகிறோம்....
"பிரின்ஸ் " - இந்தப் பெயர் பந்திப்பூர்-கர்நாடக காட்டிற்கு வழக்கமாகச் செல்பவர்களுக்கும் கானுயிர் ஆர்வலர்களுக்கும் ஒரு அதிர்வலையை உண்டாக்கும்....
"பிரின்ஸ்"- இப்போது நம்மிடையே இல்லை என அதிகாரமற்ற செய்திகள் வருவது பலருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது...
இது உண்மையாக இருக்கவே கூடாது.அப்படி உண்மையாக இருந்தால், PRINCE உன் மரணம் இவ்வளவு மோசமாக இருந்திருக்கக்கவே கூடாது.
ஒரு அனாதையைப்போல்...
நீ காட்டிற்குள் வாழ்ந்திருக்கலாம் ஆனால் உலகம் முழுவதிலும் உன்மேல் அன்பும்,காதலும்,ஆவலும் வைத்திருப்போர் எத்தனைபேர் என எனக்குத் தெரியும்.இந்த செய்திகேட்டு அழுதவர்கள் பலரைப் பற்றி நான் அறிவேன்.அவர்களின் ஆதங்கம்,காட்டிற்குள் இறந்து ஒருவாரத்திற்கும் மேலாகி கிடைத்த புலி நீயாக இருக்கக்கூடாது என்பதே...
உண்மையாக நீ இறந்து உனது இறுதிச்சடங்கு அறிவிப்பு கொடுத்திருந்தால் அங்கு எவ்வளவு கூட்டம் கூடியிருக்கும் என்பதை நாங்கள் உணர்வோம்.உண்மையாக இருக்கும் பட்சத்தில் உன்மரணம் மரியாதை கொடுக்கப்படாமலேயே போனது அனைவருக்கும் வருத்தமே...
மூன்றுவருடங்கள் நீண்டநாள் தேடலில் முதல்முறை ஒருசில நொடிகள் மட்டுமே என்னால் உன்னைப் பார்க்க முடிந்தது. ஆனால் கடந்த பொங்கல் நாளன்று இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக "கொளக்குமல்லி கட்டே"வில் உம்மோடு இருந்த நாளை எம்மால் மறக்கவே முடியாது.அன்று நவரசங்களையும் காட்டிவிட்டாய் எங்களது தீவிர ஆவலுக்கு நீ தீனிபோட்டதாகவே அன்று தோன்றியது. எங்களது மனஓட்டத்தை புரிந்து கொண்டு, எங்களை அன்று காட்டிற்கு வரவழைத்ததாகவே தோன்றியது எனக்கு, எங்களுக்கு அன்று முழு நிறைவு.அதுவே நீ மனிதர்களின் கண்ணில் பட்ட கடைசிநாளாக சொல்கிறார்கள்...
நீ அந்தக் காட்டின் அரசன்தான்.அப்படி மக்கள் அழைப்பதில் தவறில்லை புலிகளின் இயல்பிற்கு மாறுபட்ட இயல்புடைய உம்மை அப்படி அழைக்கலாம்தான். இனி நீ இல்லாவிட்டால் அந்த இடத்தை யார் நிறைவு செய்வார்கள் ?....
பொதுவாக பெரும்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகள் மிகுந்த கூச்ச உணர்வு உடையவை.அதாவது மனிதர்களிடமிருந்து விலகியே இருக்கும்....
மத்தியப் பிரதேசமாநிலம் பாந்தவகார் தேசியபூங்காவில் சார்ஜர் என்கிற புகழ்பெற்றபுலி. அது யாரைப்பார்த்தாலும் எதைப்பார்த்தாலும் உறுமிக்கொண்டு விரட்டியடிக்க ஆரம்பிக்கும்,பயமுறுத்தி தாக்குவதற்கு துரத்தும் அது காட்டிற்குள் செல்லும் சஃபாரி வாகனங்களாக இருந்தாலும் சரி மற்ற விலங்குகளாக இருந்தாலும் சரி.அதனாலேயே அந்தப்புலிக்கு Charger என்கிற பெயர் வந்தது. ஆனால் இந்த பிரின்ஸின் குணம் முற்றிலும் அதற்கு மாறுபட்டது என்பார்கள்.2009 ம் ஆண்டுவாக்கில் இதை முதலில் பார்த்ததாக கூறப்படுகிறது.அப்போது முதல் இப்போதுவரை அடிக்கடி மனிதர்கள் கண்ணில் படும்போதெல்லாம் இது பதட்டமோ,பயமோ இல்லாமல் ஏன் மனிதர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.இதன் இந்த குணத்தாலேயே தென்னிந்தியாவில், அதுவும் இந்தியாவிலேயே அதிகப்புலிகள் உள்ள ஒரு காட்டில், இதுமட்டுமே மிகப்புகழ்பெற்றதற்கு காரணம்.தென்னிந்திய புலிகளில் மிக அதிகமாக புகைப்படம் எடுத்தது இதைத்தான்.
ஒரு ஆண்புலிகளின் வாழிட எல்லை சுமார் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவாக இருக்கும். ஆனால் இதன் ஆளுகை எல்லை சுமார் என்பது கி.மீ பரப்பளவாக பார்த்துக்கொண்டு அந்த எல்லைக்குள் அதாவது மூன்று ஆண்புலிகள் வாழும் காட்டின் பரப்பளவில் எந்த ஆண்புலியையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டதுகூட இதற்கு இவ்வளவு பெயரையும் புகழையும் கொடுத்திருக்கலாம்.மனிதக்குடியிருப்புகளுக்கு அருகிலேயே இதன் வாழிடப்பரப்பு இருந்தாலும் இதுவரை எந்தவிதத்திலும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.அடிக்கடி சுற்றுலாவாசிகளையும் வன ஊழியர்களையும் கண்டும் காணாமலுமே கடந்து சென்றிருக்கிறது...
"கௌரி" பத்துவருடங்களுக்கு முன்னர் பந்திப்பூரில் இதே குணங்களோடு இருந்த பெண்புலி. "அகஸ்தியா" அப்போது 14-16 வயதான ஆண்புலி இந்த இரண்டிற்கும் பிறந்ததுதான் பிரின்ஸ் என்கிறார்கள் இது தனது தாயின் குணத்திலேயே இருப்பதாகச் சொல்கிறார்கள்.இதற்கு இப்போதைய வயது 14-15 ஆக இருக்கலாம்....
தமது வாழ்நாளில் தமது வாழிட எல்லைக்குள் வந்த பல ஆண்புலிகளை விரட்டியடித்து கொன்றதாக இதைப்பற்றி சொல்கிறார்கள் நான் இதை இறுதியாக பார்த்த கடந்த ஜனவரிக்கு முன் நடந்த சண்டையில் ஒரு ஆண்புலியின் காலை உடைத்துவிட்டதாம் நான் பார்க்கும்போது இதன் வாயருகில் சிறிய காயம் இருந்தது...
இந்தக்காட்டை ஆள இதன்வாரிசான சுல்தான் என்கிற "பசவனகட்டே" மேல்(Male)இப்போது வந்துவிட்டதாக சொல்கிறார்கள் இதனோடும் சண்டையிட்டிருக்கிறது பிரின்ஸ்.எமக்குத் தெரிந்து இதைப்பார்க்காமல் ஏக்கத்திலிருக்கும் புகைப்படக்காரர்களே மிக அதிகம் அவர்களுக்காகவாவது நீ மீண்டும் வா...
No comments:
Post a Comment