இழப்பின்வலி இழந்தவர்களுக்குத்தான் தெரியும்...
மனிதனுக்கு தன்னால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருப்பதாக நினைப்பு,அதன் விளைவாகத்தான் என்னவோ எந்த விலங்கைக் கண்டாலும், அவற்றிற்கு உணவளித்து காப்பாற்றவேண்டும் என்கிற பொறுப்பும்,பாசமும் எங்கிருந்தோ வந்துவிடுகிறது...
அப்போதைக்கு பெரும்பாலான மனிதர்கள் என்ன தின்றுகொண்டிருக்கிறாகளோ,அதற்கு அந்த தீனியின் மிச்சத்தைப் போடுவது...
அதுவும் காடுகளிடையே செல்லும் முக்கிய ரோடுகளில் சொல்லவே வேண்டாம் அங்கே ரோட்டோரத்தில் காணும் குரங்கானாலும் சரி மான்களானாலும் சரி அருகே தமது வாகனத்தை நிறுத்தி உணவுகொடுப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன் கேட்டால் அவற்றைப்பார்த்தால் பாவமாக இருக்கிறதாம்...
உடனே நான்...
இன்னும் சற்று உள்ளே சென்று பாருங்கள் இரண்டு புலிகள் நான்கு நாட்களாக எதுவும் கிடைக்காமல் இருக்கிறது அதற்கு எதாவது வைத்திருக்கிறீர்களா?!...
அப்போது அவர்கள்முகத்தைப் பார்க்க வேண்டுமே!...
நீ அவைகளுக்குப்பின்னரே இந்தப்பூமியில் பிறந்தவன்,நீ பிறப்பதற்கு முன்புகூட அவை உணவை உண்டு கொண்டுதான் இருந்தது...
இப்படியே பழக்கப்பட்டு விட்டதால் இயற்கையாக உணவுதேடும் பண்பையே இழந்துவிடுகிற அபாயத்தில் உள்ளன.அதனால் எந்தநேரமும் ரோட்டோரத்திலேயே வருகிற வாகனங்களை உணவுக்காக எதிர்பார்த்து பிச்சைஎடுப்பதுபோல் காத்துக்கிடக்கின்றன...
இந்த உணவுகளைத் தின்பதின் விளைவாக அவற்றிற்கு தோல்நோய் உட்பட பல நோய்கள் உண்டாகிவிட்டன. ரோட்டோரத்திலிருக்கும் மான்களையும் காட்டிற்குள் இருக்கும் மான்களையும் கூர்ந்து கவனித்தால் இந்த வித்தியாசங்கள் தெரியும்...
நாம் உணவளித்துக் கொண்டிருக்கும் போது நம்மைத்தாண்டி வேகமாகச் செல்கின்ற வாகனங்களில் அடிபட்டு கை,கால்கள் மற்றும் வாலினை இழந்த பல குரங்குகளை பார்க்கலாம்...
நான் சொல்ல வந்தது இப்படத்திலுள்ள குரங்கின் குட்டியைப் பற்றியது. மசினங்குடிதாண்டி ஊட்டிவருகிறவழியில்
அப்படி ரோட்டோரத்தில் உணவிற்காக தாய் கையேந்தி நின்றபோது விலகிச்சென்ற வாகனத்தில் குட்டி மரணித்துவிட்டது.குட்டி செத்ததைக்கூட உணராத தாய் பாசத்தின் விளைவாக கடந்த மூன்றுநாட்களாக தூக்கிச் சுமந்துகொண்டே சுற்றிவருகிறது...
அதன் முகத்தைப் பாருங்கள்...
குட்டி குடிப்பதற்காக பால்சுரந்த முலைகளைப் பாருங்கள்...
மனிதனுக்கு அகங்காரம் எப்பொழுது தொலைவது?
வால்பாறையில் கூச்சம் நிறைந்த சோலை மந்திகள் (சிங்கவால் குரங்கு) இப்போது சாலையோரத்தில் பிச்சையெடுக்கிறது,திம்பம் மலைப்பாதையில் இப்போது அனுமன்குரங்கு எனப்படும் கிரே லங்கூரும் பிச்சை எடுக்கிறது. தெப்பக்காடு தாண்டியதும் சாலையோரத்தில் மான்களும் எதையோ எதிர்பார்த்து நிற்கிறது...
மனிதா....
அதற்கு எண்ணெய்யும்,காரமும் உப்பும்,மசாலாவும்,சர்க்கரையும்,மைதாவையும் சேர்த்துச் செய்த ரசாயன உணவுகளைக்கொடுத்து,
அவற்றை உன்னைப்போலவே நோயுடன் திரியச் சொல்கிறாயா?...
உனக்கு உண்மையிலேயே விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்குமானால்
மரங்களை நடு...
மரத்தை வெட்டுபவனிடம் சண்டைக்குப் போ...
மரங்கள் காப்பாற்றப்பட்டால் "கனிகள்"
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாகுமல்லவா...
கொட்டைகள் மூலம் விதைகளும் பரவும்,காடுபெருகி மழையும் பெய்யும்...
புவியும் குளிரும்...
மனிதனுக்கு தன்னால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருப்பதாக நினைப்பு,அதன் விளைவாகத்தான் என்னவோ எந்த விலங்கைக் கண்டாலும், அவற்றிற்கு உணவளித்து காப்பாற்றவேண்டும் என்கிற பொறுப்பும்,பாசமும் எங்கிருந்தோ வந்துவிடுகிறது...
அப்போதைக்கு பெரும்பாலான மனிதர்கள் என்ன தின்றுகொண்டிருக்கிறாகளோ,அதற்கு அந்த தீனியின் மிச்சத்தைப் போடுவது...
அதுவும் காடுகளிடையே செல்லும் முக்கிய ரோடுகளில் சொல்லவே வேண்டாம் அங்கே ரோட்டோரத்தில் காணும் குரங்கானாலும் சரி மான்களானாலும் சரி அருகே தமது வாகனத்தை நிறுத்தி உணவுகொடுப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன் கேட்டால் அவற்றைப்பார்த்தால் பாவமாக இருக்கிறதாம்...
உடனே நான்...
இன்னும் சற்று உள்ளே சென்று பாருங்கள் இரண்டு புலிகள் நான்கு நாட்களாக எதுவும் கிடைக்காமல் இருக்கிறது அதற்கு எதாவது வைத்திருக்கிறீர்களா?!...
அப்போது அவர்கள்முகத்தைப் பார்க்க வேண்டுமே!...
நீ அவைகளுக்குப்பின்னரே இந்தப்பூமியில் பிறந்தவன்,நீ பிறப்பதற்கு முன்புகூட அவை உணவை உண்டு கொண்டுதான் இருந்தது...
இப்படியே பழக்கப்பட்டு விட்டதால் இயற்கையாக உணவுதேடும் பண்பையே இழந்துவிடுகிற அபாயத்தில் உள்ளன.அதனால் எந்தநேரமும் ரோட்டோரத்திலேயே வருகிற வாகனங்களை உணவுக்காக எதிர்பார்த்து பிச்சைஎடுப்பதுபோல் காத்துக்கிடக்கின்றன...
இந்த உணவுகளைத் தின்பதின் விளைவாக அவற்றிற்கு தோல்நோய் உட்பட பல நோய்கள் உண்டாகிவிட்டன. ரோட்டோரத்திலிருக்கும் மான்களையும் காட்டிற்குள் இருக்கும் மான்களையும் கூர்ந்து கவனித்தால் இந்த வித்தியாசங்கள் தெரியும்...
நாம் உணவளித்துக் கொண்டிருக்கும் போது நம்மைத்தாண்டி வேகமாகச் செல்கின்ற வாகனங்களில் அடிபட்டு கை,கால்கள் மற்றும் வாலினை இழந்த பல குரங்குகளை பார்க்கலாம்...
நான் சொல்ல வந்தது இப்படத்திலுள்ள குரங்கின் குட்டியைப் பற்றியது. மசினங்குடிதாண்டி ஊட்டிவருகிறவழியில்
அப்படி ரோட்டோரத்தில் உணவிற்காக தாய் கையேந்தி நின்றபோது விலகிச்சென்ற வாகனத்தில் குட்டி மரணித்துவிட்டது.குட்டி செத்ததைக்கூட உணராத தாய் பாசத்தின் விளைவாக கடந்த மூன்றுநாட்களாக தூக்கிச் சுமந்துகொண்டே சுற்றிவருகிறது...
அதன் முகத்தைப் பாருங்கள்...
குட்டி குடிப்பதற்காக பால்சுரந்த முலைகளைப் பாருங்கள்...
மனிதனுக்கு அகங்காரம் எப்பொழுது தொலைவது?
வால்பாறையில் கூச்சம் நிறைந்த சோலை மந்திகள் (சிங்கவால் குரங்கு) இப்போது சாலையோரத்தில் பிச்சையெடுக்கிறது,திம்பம் மலைப்பாதையில் இப்போது அனுமன்குரங்கு எனப்படும் கிரே லங்கூரும் பிச்சை எடுக்கிறது. தெப்பக்காடு தாண்டியதும் சாலையோரத்தில் மான்களும் எதையோ எதிர்பார்த்து நிற்கிறது...
மனிதா....
அதற்கு எண்ணெய்யும்,காரமும் உப்பும்,மசாலாவும்,சர்க்கரையும்,மைதாவையும் சேர்த்துச் செய்த ரசாயன உணவுகளைக்கொடுத்து,
அவற்றை உன்னைப்போலவே நோயுடன் திரியச் சொல்கிறாயா?...
உனக்கு உண்மையிலேயே விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்குமானால்
மரங்களை நடு...
மரத்தை வெட்டுபவனிடம் சண்டைக்குப் போ...
மரங்கள் காப்பாற்றப்பட்டால் "கனிகள்"
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாகுமல்லவா...
கொட்டைகள் மூலம் விதைகளும் பரவும்,காடுபெருகி மழையும் பெய்யும்...
புவியும் குளிரும்...
சுரந்து நிற்கும் பால் அதைக்குடிக்க குட்டி உயிரோடு இல்லை.
மூன்றுநாட்களாக இறந்த குட்டியை பாசத்தோடு தூக்கிக் கொண்டே சுற்றும் தாய்...
இயல்பிலேயே மிகவும் கூச்ச சுபாவம் உடையதும் உயரமான மரச்சிவிகைகளில் மட்டுமே வாழக்கூடியதுமான சோலைமந்திகள் இன்று வால்பாறை நகரிற்குள் உணவுதேடி சாம்பார் பொட்டலத்தை பிரித்துக்கொண்டிருக்கிறது.இது ஒரு கையை இழந்த குரங்கு...
இந்த நிலைக்கெல்லாம் காரணம், மனிதர்களின் அறியாமையும் பேராசையும்தான்....
சூழலியல் ஆர்வத்துடன்.
Ramamurthi Ram
No comments:
Post a Comment