இவள் பெயர்பெற்ற வங்கப்புலி.இவள்தான்
மச்சலி (machali) இந்தியாவின் ரான்தன்பூர் தேசிய பூங்காவில்வாழ்ந்த "வாழ்நாள் சாதனையாளர் விருது" பெற்றவள்...
1997 ஆம் ஆண்டுவாக்கில் பிறந்த இந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டாள்...
அதன்பின்னர் இன்றுவரை அவள்தான் அங்கு ராணியாக இருந்தாள். மச்சலியின் ரசிகர்கள் அவளைச் செல்லமாக "ஏரியின் பெண்மணி" என்கின்றனர்...
அங்கு வங்கப்புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதில் இவள்பங்கு மகத்தானது....
தன் குட்டிகளைக்காக ஏரியில் உள்ள முதலைகளுடன் பல முறை சண்டையிட்டு இதுவரை மூன்று முதலைகளைக் கொன்றிருக்கிறாள் மச்சலி.பற்களை இழந்த நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நன்கு வளர்த்தியிருக்கிறாள்...
பொதுவாக காட்டில் வாரும் புலிகள் சுமாராக அதிகபட்சமாக பதினைந்து ஆண்டுகாலமே வாழக்கூடிய நிலையில் இவள் சுமார் இருபது ஆண்டு காலம் வாழ்ந்தது கூடச் சாதனைதான்.உலகிலேயே அதிக அளவில் படம்பிடிக்கப்பட்ட புலியழகியும் இவள்தான்...
இந்த அற்புதப் பெண்மணி நம்மிடையே இன்றைக்கு இல்லை...
ஆமாம் இன்று(18oct2016) காலை 10மணியளவில் உயிரை விட்டு நம்மிடமிருந்து சென்றுவிட்டாள்....
மற்றுமொரு சிறப்பாக இந்தியாவில் வாழும் சிறந்த குடிமகனுக்குகூட கிடைக்காத ஒருதேசத் தலைவருக்கு ஒப்பான மரியாதை, இவளின் சாவின் இறுதிச் சடங்கில் கிடைத்திருக்கிறதென்றால் இவள் புகழையும் பெயரையும் இனி இந்த உலகம் உணரும்....
அவளது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்...
சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram
No comments:
Post a Comment