Friday, 10 March 2017

மக்னா என்கிற, "மோல யானை"

"மோல யானை"



காடுவாழ் மக்கள் இந்த யானையை இந்தப் பெயரில்தான் குறிப்பிடுவார்கள்.
கிராமப் புறங்களில் கூட கொம்புகளற்ற ஆட்டை மோலையாடு எனவும்,கொம்புகளற்ற  மாட்டை மோலை என்பதைக் கவனிக்கலாம்.அப்படிப்பட்ட மோலையானையை நாமெல்லாம் சொல்வது "மக்னா"
அது என்ன மக்னா மற்றும் மோல யானை?

மேல்தாடை பற்களின் நீட்சியே தந்தம்( ஹிந்தியில் தந்த் என்றால் பல்) தந்தம் பலவித்த்தில் யானைக்கு பயனாய் இருக்கிறது. இந்த தந்தமில்லாது குறைபாட்டுடன் பிறக்கும் ஆண்யானையே
மக்னாவாகிறது...
தந்தமில்லாத நிலையில் இருக்கும் இவற்றை எந்தக்கூட்டத்திலும் சேர்த்துக் கொள்ளாத்தால் இவை மிக மூர்க்கத்தனத்தோடு இருந்து மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் ஏற்பட அவற்றின் மனஅழுத்தமே காரணமாகிறது...



ஆண்யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும் ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே இவைகளின் நிலை மிகப் பரிதாபமாகிவிடுகிறது...

பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணைசேரமுடியும் பலத்தைக்காட்ட போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் ஆகவேண்டும் போட்டியில் வெல்ல தந்தம் மிக முக்கிய ஆயுதம். நிராயுதபாணியான மோலயானைகள் எல்லாக்கூட்டங்களிலும் விலக்கியே வைக்கப்படுகின்றன. எப்படிப்பட்ட மக்னாவானாலும் அவை தனித்தே வாழும் வருந்தத்தக்க சூழல்...



இங்கே இப்படியிருக்க,
தந்தவேட்டையில் உச்சத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவில் இருபால் யானைகளுக்கும் தந்தமுள்ளதால் வேட்டையாடிகளுக்கு மிகவும் நல்லவாய்ப்பு.தன்இனத்தை இந்தபூமியில் தக்கவைத்துக் கொள்வதற்காக, அங்குள்ள யானைகளுக்கு தந்தமற்றபண்பு மேலோங்கி வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன இது நமக்கெல்லாம் மிக வியப்பான செய்திதான்...

ஆனால் ஆசிய உள்ளினமான இலங்கை யானைகளில் பெரும்பாலான ஆண்யானைகளுக்கு தந்தம்இல்லை இது பலகாலமாக தொடருவதாகத்தான் இருக்கிறது...
இப்பண்பானது மற்றகுழு யானைகளுடனான கலப்பில்லாமல் இருந்ததினால் வளர்ந்திருக்கலாம்...

இந்தப் படங்களிலுள்ள மோலை பந்திப்பூர் காட்டில் எங்களை எந்தவிதமான அச்சுறுத்தலும் செய்யாது ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே நீர்க்குளியலையும் மண்குளியலையும் நடத்திமுடித்து கொஞ்சநேரம் கரையோரமுள்ள புற்களை மேய்ந்துவிட்டு மிகமிக அமைதியாகவே சென்றது...



யானைகளைப்பொறுத்தவரை மனிதர்களுடன் இணக்கமாகவே இருக்க விரும்புகின்றன ஆனால் நாம் செய்யும் சூழல் சீர்கேடுகளாலேயே அவை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி சில இடங்களில் யானை மனித மோதல்கள் உருவாகின்றன...

காடுகள் வழியே செல்லும்போதாவது யானைகளுக்கு மிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்,பாலிதீன்  பேப்பர்கள் மற்றும் கண்ணாடிபாட்டில்களையும் மற்ற குப்பைகளையும் தவிர்போம். நெருப்பைஉண்டாக்கும் செயல்களைத்தடுப்போம்,தவிர்ப்போம்.  கண்ணாடிப் பாட்டில்கள் யானைகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கி உயிரிழப்புவரை கொண்டு செல்ல முடியும். அப்படி இவற்றைத் தவிர்க்கவே முடியாவிட்டால் கழிவுகளாக அங்கேயே போடாமல் நம்முடனேயே எடுத்துக்கொண்டாவது வருவோம்...
"பல்லுயிர்ச் சூழல் காப்போம்"

சூழலியல் ஆர்வத்துடன்...
Ramamurthi Ram
படங்கள்:
Divya Barathi Ramamurthi

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...