Thursday, 9 March 2017

இருவாச்சி காவியம்...




இது இருவாச்சி காவியம்...

பாசக்காரப் பறவை!..

பறவைகளில் என்னைக் கவர்ந்த
இருவாய்ப் பறவை
என்கிற இருவாச்சி...
Great Indian hornbill (Buceros bicornis)

இவற்றில் மொத்தம்52 உள்ளினங்கள் உலகளவில் சுமார் ஒன்னரை கோடிஆண்டுகளாக வாழ்கின்றன...

இவற்றில் மலைஇருவாச்சி யைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
இது மலைமொங்கன்,
மலைமுழக்கி,
மரத்தலையன்,
இருதலையன்,
இருதலைப்பட்சி...
எனப்பல பெயர்களில் அழைக்கப்படும், மஞ்சள், வெள்ளை, கருப்பு வண்ணங்களில் நீண்ட அலகுகள் மற்றும் இறகுகளுடன் பார்க்க ஓரளவு பெரிய உருவம் கொண்டவை இந்தப் பறவைகள். இதன் இறகுகளுக்கு சர்வதேச கடத்தல் சந்தையில் பெரும் மதிப்பு உண்டு. இந்தியாவில் இவை பெரும்பாலும் வேட்டையாடப்பட்டுவிட்டன. அதனால், அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தப் பறவைகள், அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.



இவற்றில் 44 உள்ளினங்கள் மிகுந்த
அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் இருக்கிறது...

இதில் இந்தியாவில் ஒன்பது இனங்களே இருக்கிறது
தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சி இனங்கள் உள்ளன...

கேரளாவில்லும் அருணாச்சலப்பிரதேசத்திலும்  இருவாச்சியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நான்கு வகை இருவாச்சிப் பறவைகள் உள்ளன.

அவை, பெரும்பாத இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார்பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுபவை. இதில் அந்தமான் தீவுகளில் காணப்படும் நார்கொண்டான் இருவாச்சி, மிகவும் அரிதான இருவாச்சி பறவையாக கண்டறியப்படுகிறது.

இருவாச்சிப் பறவையின் இனப்பெருக்க காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையாகும்.



இவை அஞ்சக்கூடிய அளவில் அழியும் நிலையில் இருக்கின்றன,இவைகள் முற்றிலும் அழிந்துவிட்டால் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மழைக்காடுகளில் மட்டும் சுமார் பத்துவகை மரங்கள் அழிந்துவிடும் என இயற்கை ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள். ஏனெனில் இவற்றின் எச்சம் மூலம்மட்டுமே இவ்வகை மரங்கள் முளைக்கும்திறனைப் பெறுகின்றன...



இவற்றில் நான் இதுவரை மூன்று இனங்களை மட்டும் பார்த்துள்ளேன் அவற்றில் என்னை மிகவும் ஈர்த்ததும் முதல்முறையாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் நான் பார்த்ததும் இதைத்தான் அதுதான் நம்ம மலைஇருவாச்சி (great indian hornbill)

எனக்குமட்டும் அல்ல இதை யார் பார்த்தாலும் அப்போதிருந்து இந்தப் பறவையை அனைவருக்கும் பிடித்துவிடும் காலகாலமாக இதுதான் நடந்துவந்துள்ளது...

அழகு,வியப்பு,ஆச்சரியம் கலந்த கலவைதான் இருவாச்சி...

எத்தனைநாட்கள் எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவலைத் தூண்டுபவைதான்
இந்த இருவாய்ப் பறவை...

இதன் அழகான அலகும், சிறகும்தான் இதற்கு எதிரியாகி அவற்றிற்காக,
கடந்த பல்லாண்டுகாலமாக மனிதன் கொன்று வெகுவாக ஒழித்துவிட்டான்....

இவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்..
இதை அனைவருக்கும் உணரவைப்போம்...

இதன் வாழ்க்கை மிகுந்த ஆவலைத் தூண்டக்கூடியது
இதன் வாழ்வில் ஒருமுறை இணைசேர்ந்தால் அந்தஜோடி வாழ்நாள்முழுவதும் பிரியாது!...

இணைசேர்ந்தபின் முட்டையிடுவதற்கு தகுந்த இடத்தைத்தேடும்,மிக உயரமான மரத்திலுள்ள பொந்தையே தேர்வு செய்யும் ...

பொந்தினுள் சென்ற பெண்பறவை ஒன்றிலிருந்து மூன்றுமுட்டைகள் வரை இடும்
பொரிக்கும் குஞ்சுகளுக்கு மெத்தென்றிருக்கும் படுக்கையைத்தாயார் செய்ய பெண்தனது இற்கைகளை உதிர்த்து படுக்கைஅமைக்குமாம்...

ஆண் ஆற்றுப்படுகையிலுள்ள மண்ணை எடுத்துவந்து தமதுஎச்சிலோடு சேர்த்து உணவளிக்க மட்டும் சிறிய துவாரத்தை விட்டு சுவர்வைத்து மூடிவிடும்!..

சுவாரனது விசத்தன்மையுடன் இருக்குமாம்,பாம்புகள்கூட நெருங்க முடியாதுஏனெனில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்புத்தன்மையை இயற்கை அதற்கு கொடுத்திருக்கிறது.
(இத்தகவல் உதவி சோலையார் தொல்குடி நண்பர் ராஜ்குமார்)

ஆண்கூட்டிலிருக்கும் இணைக்கும்,குஞ்சுகளுக்கும் சத்துநிறைந்த பழங்கள்,கொட்டைகள்,சிறிய வகை ஊர்வன சமயத்தில் சிறுபறவைகளைக் கூட கொண்டுவந்து தரும்.வெகுநாட்கள் இதைப் பழஉண்ணி என எண்ணியிருந்தனர்..

இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில் உணவுதேடச்செல்லும் ஆண்இருவாச்சியானது வேட்டையினாலோ இதரகாணங்களாலோ உயிரிழந்து,கூட்டிற்கு திரும்பவில்லையெனில் மொத்த குடும்பமும் அழிந்துவிடும்.பெண்
இறக்கையற்ற நிலையியில் எப்படிப் பறக்கும்?...

இவை பறக்கும்போது ஹெலிக்காப்டர் பறப்பதைப்போன்ற சத்தத்தைக்கேட்கலாம்,
இதன்அலகின் மேல் பகுதியில் அமைந்துள்ள மற்றொறு அடுக்கானது(casque) இதற்கு மேலும் ஒருவாய்ப்பகுதி உள்ளதுபோன்று தோன்றும் அதனாலேயே இதற்கு இரண்டுவாயுடையபறவை அதாவது இருவாய்ப்பறவை என பெயர்பெற்றது....

இதன் உணவில் தவறிவிழுந்த ஒரு வகைகொட்டையில் பாதியை தின்றுபார்த்தேன் சற்றுபோதை தரும்தன்மையுடன் இருந்தது பிறகுதான் அந்த ஆதிகுடி நண்பர் அந்தக்கொட்டை நச்சுத்தன்மையுடையது எனக்கூறினார்,
அந்த நச்சுத்தன்மையே கூட்டின் பாதுகாப்பிற்கு வழிசெய்யுமோ என எண்ணினேன்...



அந்தகொட்டையை தொல்குடிகள் போதை இன்பத்திற்காக பயன்படுத்துவதாக கூடுதல் தகவலையும் தந்தார்!...
(யாரும் கிளம்பிடாதீங்க எவ்வளவு பயன்படுத்தவேண்டும் என்கிற நுண்ணறிவு அவர்களுக்குத்தான் தெரியும்)

இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் எல்லாவிதமான அறிவையும் தந்திருக்கிறது...நாம்தான் பலவற்றை உணர்வதில்லை!..

இந்தவகைப் பறவைகள் ஒருகாட்டில் இருந்தால் அந்தக்காடானது இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என உணரலாம்...

இந்த அக்டோபர் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்படும் வன உயிரின பாதுகாப்பு வாரம் மட்டுமல்லாது அன்றாடம் அனைத்து நாட்களையுமே வன உயிரின பாதுகாப்பு நாளாக கருதி வனவளம் உயிர்வளம் காப்போம்...

நாம் இல்லையெனில் விலங்குகள், பறவைகள் நலமாக வாழ்ந்திடும். அவை இல்லையெனில் நாம் ஒருநாளும் ஒரு நிமிடங்கூட வாழ முடியாதென்பதே உண்மை...

(இந்தப் படங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில் எடுத்தவை)

சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi.

https://m.facebook.com/story.php?story_fbid=1060376700745031&id=100003181323647

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...