"மனிதன் மாற்றிவிட்டான்....
மரத்திலிருந்து இறக்கிவிட்டான்"
ஒருகாலத்தில் மேற்குதொடர்ச்சி மலை முழுவதுமே பரவி வாழ்ந்த ஒரு குரங்கினம் இன்று சில இடங்களில் மட்டுமே தமது வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது...
சங்ககாலத்தில் நரைமுக ஊகம் என்றழைக்கப்பட்ட இன்றுபரவலாக அதன் வாலின் அமைப்பை குறிக்கும் வகையில் சிங்கவால் குரங்கு என அதன் ஆங்கிலபெயரான Lion tailed macaque லிருந்து நேரடியாக மொழிபெயர்த்து சிங்கவால் குரங்கென அழைக்கப்படுகிறது...
இவை மழைக்காடுகளான அடர்ந்த சோலைக்காடுகளில் வாழ்வதால் தமிழில் இவற்றிற்கு அழகாக சோலைமந்தி என்கிற பெயர் உண்டு....
இந்த சோலைமந்திகள் உயர்ந்த மரச்சிவிகைகளில்(canoby)மட்டுமே வாழும் தன்மையைக் கொண்டவை.அரிதாகவே கீழே இறங்கிவருபவை ஆனால் இன்று இவற்றின் வாழ்க்கைநிலை குறிப்பாக வால்பாறைபகுதிகளில் மிக மோசமாகி விட்டது....
ஆங்கிலேயர்கள் வருகைக்குமுன்புவரை இன்றைய கோவா மகாராஸ்டிரா வரை மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் வாழ்ந்த இவை காபி, தேயிலை,தேக்கு போன்றவை பயிரிட ஆரம்பித்தபின் மழைக்காடுகளான சோலைக்காடுகளை அழித்தன் விளைவாக இவை வாழத்தகுந்த இடங்கள் வெகுவாகச் சுருங்கிவிட்டது பிரச்சனை சோலைமந்திகளுக்கு மட்டுமில்லை சோலைக்காடுகள் அழிக்கப்பட்தால் இன்று பல ஆறுகள் காணமலேயே போய்விட்டதுதான் வேதனை...
இன்றைய நிலையில் மிக அழிவுநிலையிலான அரிதான எண்ணிக்கையில்,தமிழ் நாடு,கேரள,கர்நாடகப் பகுகளில் சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது...
மரத்திற்குமரம் தாவுவதில் சிறப்பான திறமையுடைய இவை சாலைகள் விரிவாக்கத்தினால் மரங்கள் அழிக்கப் பட்டதால் சாலையின் மறுபுறம் செல்ல மரத்தைவிட்டு இறங்கிவரவேண்டிய சூழல் உண்டாகிவிட்டது அதனால் பலவகைகளில் மனிதர்களால் அவற்றின் குண இயல்புகள் மாற்றப்பட்டுவிட்டது...
கடந்த வாரம் வால்பாறை சென்றபோது அவைகளின் பரிதாபான மாற்றம் குறித்து மிக வேதனையே உண்டானது அந்த இடங்களில் வாகனங்கள் மெதுவாகமட்டுமே செல்ல வேண்டும். அப்படி மெதுவாகச் செல்லும் வாகனங்கள்மீது பாய்ந்து ஏறிவிடுகிறது ஏதாவது கொடுப்பார்களா எனப் பார்க்கிறது அந்த வழியே செல்லும் பலர் அவற்றிற்கு பிஸ்கட்,பஜ்ஜி,வடை போன்ற தினபண்டங்களை கொடுப்பதை வழக்கமாகவே வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது....
மிக மிக கூச்ச சுபாவமுடைய இவை அதுவும் மனிதர்களைக்கண்டால் விலகியே இருக்கும் இவற்றின் குணம் மனிதர்களால் மனிதனிடம் கையேந்தி பிச்சையெடுக்கவும் சில நேரங்களில் மனிதனிடம் வழிப்பறி செய்யுமளவிற்கும் மாற்றப்பட்டுவிட்டது...
நாங்கள் இருந்த கொஞ்ச நேரத்திலும் பலர்வீசியெரிந்ததை அவர்களிடமே எடுத்துக்கொடுத்து மனிதர் கொடுக்கும் உணவுகளால் அவற்றிற்கு உடல்நல பாதிப்பு உண்டாவதுபற்றியும் உணவைஎதிர்பார்த்து அவை சாலைகளிலேயே இருப்பதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு அவற்றிற்கு கைகால்கள் வாலை இழந்துவிடும் சில நேரங்களில் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும் என்பதுபற்றியும் சொன்னோம் பலர் உணர்ந்துபுரிந்து தவறிற்கு வருந்தினர்...
அதேநேரத்தில் வனத்துறையும் தன்னார்வலர்களும் இவ்வாறு நடக்காமலிருக்க இடைவிடாது பணியாற்றுவது மிகுந்த பாராட்டிற்கு உரியது. இருப்பினும் விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் ஓரிருவர்மட்டுமே அனைவரையும் தடுத்து அனுப்புவது மிகச் சிரமமே...
இப்போது பல நேரங்களில் வால்பாறை நகருக்குள்ளும் வீடுகள்நோக்கி உணவிற்காக வருவதை பார்த்ததுதான் மிக வேதனை அங்குள்ள குப்பைத்தொட்டிகளிலும் உணவைத் தேடுவதைப் பார்க்க முடிந்தது....
இவ்வாறெல்லாம் நடக்க அவை விரும்பி உண்ணும் குரங்குபலா போன்ற மரங்கள் வெகுவாக வெட்டியழிக்கப் பட்டதுகூட காரணமாகச் சொல்லப் படுகிறது...
எது எப்படியிருப்பினும் இவற்றின் நிலைகண்டு வேதனைதான் மிஞ்சியது..
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi
எமது முகநூல் பதிவின் இணைப்பு:
https://m.facebook.com/story.php?story_fbid=1119794744803226&id=100003181323647
மரத்திலிருந்து இறக்கிவிட்டான்"
ஒருகாலத்தில் மேற்குதொடர்ச்சி மலை முழுவதுமே பரவி வாழ்ந்த ஒரு குரங்கினம் இன்று சில இடங்களில் மட்டுமே தமது வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது...
சங்ககாலத்தில் நரைமுக ஊகம் என்றழைக்கப்பட்ட இன்றுபரவலாக அதன் வாலின் அமைப்பை குறிக்கும் வகையில் சிங்கவால் குரங்கு என அதன் ஆங்கிலபெயரான Lion tailed macaque லிருந்து நேரடியாக மொழிபெயர்த்து சிங்கவால் குரங்கென அழைக்கப்படுகிறது...
இவை மழைக்காடுகளான அடர்ந்த சோலைக்காடுகளில் வாழ்வதால் தமிழில் இவற்றிற்கு அழகாக சோலைமந்தி என்கிற பெயர் உண்டு....
இந்த சோலைமந்திகள் உயர்ந்த மரச்சிவிகைகளில்(canoby)மட்டுமே வாழும் தன்மையைக் கொண்டவை.அரிதாகவே கீழே இறங்கிவருபவை ஆனால் இன்று இவற்றின் வாழ்க்கைநிலை குறிப்பாக வால்பாறைபகுதிகளில் மிக மோசமாகி விட்டது....
ஆங்கிலேயர்கள் வருகைக்குமுன்புவரை இன்றைய கோவா மகாராஸ்டிரா வரை மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் வாழ்ந்த இவை காபி, தேயிலை,தேக்கு போன்றவை பயிரிட ஆரம்பித்தபின் மழைக்காடுகளான சோலைக்காடுகளை அழித்தன் விளைவாக இவை வாழத்தகுந்த இடங்கள் வெகுவாகச் சுருங்கிவிட்டது பிரச்சனை சோலைமந்திகளுக்கு மட்டுமில்லை சோலைக்காடுகள் அழிக்கப்பட்தால் இன்று பல ஆறுகள் காணமலேயே போய்விட்டதுதான் வேதனை...
இன்றைய நிலையில் மிக அழிவுநிலையிலான அரிதான எண்ணிக்கையில்,தமிழ் நாடு,கேரள,கர்நாடகப் பகுகளில் சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது...
மரத்திற்குமரம் தாவுவதில் சிறப்பான திறமையுடைய இவை சாலைகள் விரிவாக்கத்தினால் மரங்கள் அழிக்கப் பட்டதால் சாலையின் மறுபுறம் செல்ல மரத்தைவிட்டு இறங்கிவரவேண்டிய சூழல் உண்டாகிவிட்டது அதனால் பலவகைகளில் மனிதர்களால் அவற்றின் குண இயல்புகள் மாற்றப்பட்டுவிட்டது...
கடந்த வாரம் வால்பாறை சென்றபோது அவைகளின் பரிதாபான மாற்றம் குறித்து மிக வேதனையே உண்டானது அந்த இடங்களில் வாகனங்கள் மெதுவாகமட்டுமே செல்ல வேண்டும். அப்படி மெதுவாகச் செல்லும் வாகனங்கள்மீது பாய்ந்து ஏறிவிடுகிறது ஏதாவது கொடுப்பார்களா எனப் பார்க்கிறது அந்த வழியே செல்லும் பலர் அவற்றிற்கு பிஸ்கட்,பஜ்ஜி,வடை போன்ற தினபண்டங்களை கொடுப்பதை வழக்கமாகவே வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது....
மிக மிக கூச்ச சுபாவமுடைய இவை அதுவும் மனிதர்களைக்கண்டால் விலகியே இருக்கும் இவற்றின் குணம் மனிதர்களால் மனிதனிடம் கையேந்தி பிச்சையெடுக்கவும் சில நேரங்களில் மனிதனிடம் வழிப்பறி செய்யுமளவிற்கும் மாற்றப்பட்டுவிட்டது...
நாங்கள் இருந்த கொஞ்ச நேரத்திலும் பலர்வீசியெரிந்ததை அவர்களிடமே எடுத்துக்கொடுத்து மனிதர் கொடுக்கும் உணவுகளால் அவற்றிற்கு உடல்நல பாதிப்பு உண்டாவதுபற்றியும் உணவைஎதிர்பார்த்து அவை சாலைகளிலேயே இருப்பதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு அவற்றிற்கு கைகால்கள் வாலை இழந்துவிடும் சில நேரங்களில் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும் என்பதுபற்றியும் சொன்னோம் பலர் உணர்ந்துபுரிந்து தவறிற்கு வருந்தினர்...
அதேநேரத்தில் வனத்துறையும் தன்னார்வலர்களும் இவ்வாறு நடக்காமலிருக்க இடைவிடாது பணியாற்றுவது மிகுந்த பாராட்டிற்கு உரியது. இருப்பினும் விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் ஓரிருவர்மட்டுமே அனைவரையும் தடுத்து அனுப்புவது மிகச் சிரமமே...
இப்போது பல நேரங்களில் வால்பாறை நகருக்குள்ளும் வீடுகள்நோக்கி உணவிற்காக வருவதை பார்த்ததுதான் மிக வேதனை அங்குள்ள குப்பைத்தொட்டிகளிலும் உணவைத் தேடுவதைப் பார்க்க முடிந்தது....
இவ்வாறெல்லாம் நடக்க அவை விரும்பி உண்ணும் குரங்குபலா போன்ற மரங்கள் வெகுவாக வெட்டியழிக்கப் பட்டதுகூட காரணமாகச் சொல்லப் படுகிறது...
எது எப்படியிருப்பினும் இவற்றின் நிலைகண்டு வேதனைதான் மிஞ்சியது..
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi
எமது முகநூல் பதிவின் இணைப்பு:
https://m.facebook.com/story.php?story_fbid=1119794744803226&id=100003181323647
No comments:
Post a Comment