மனதை விட்டு நீங்காமல் மனதை அரித்துக்கொண்டே இருக்கும் சம்பவங்கள் நமது வாழ்க்கையில் நடப்பது உண்டு.ஆனால் எங்கோ வெகுதொலைவில் பல நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இன்னும் மனதை ஏதோ செய்துகொண்டிருக்கிறது...
நம்ம பிரதமரோட சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள முக்கியமான மாவட்டம்தான் சூரத் இது ரொம்ப ஸ்பெஷல் ஏனெனில் உலகிலுள்ள பெரிய நகரங்களின் பட்டியலில் சூரத் முப்பத்தி ஆறாவது இடத்தில் உள்ளது....
இந்த மாவட்டதில் உள்ள உமர்படா என்கிற தாலூக்காவில் வாடிஃபாலியா(Vadifaliya)கிராமத்தில் கடந்த வருடம் ஒரு புதன்கிழமை நாளில் (02/11/2016)அங்குள்ள மக்கள் ஒரு முக்கியமான காரியத்தை செய்திருக்கிறார்கள் அது என்னவென்று பார்ப்பதற்கு முன்னர் இந்த கிராமத்தைப்பற்றிப் பார்ப்போம்....
இந்த கிராமம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது அதாவது குஜராத் மாநில பழங்குடியின முன்னேற்றத்துறை அமைச்சர் கன்பத்வசாவாவின் சொந்தக் கிராமம் இது...
இந்த கிராமத்திலன் அருகே சில நாட்களாக உலாவிக் கொண்டு இருந்தது ஒரு சிறுத்தை....
அந்த சமயத்தில் அந்த கிராமத்திலுள்ள ஒரு எட்டு வயசு பெண்குழந்தையான நிகிதாவஷாவும் அவளுடைய தோழிகள் இரண்டுபேரும் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ஒதுங்கியிருக்கிறார்கள் அப்போது அங்குவந்த இந்தச் சிறுத்தை நிகிதாவஷாவை கவ்வித் தூக்கிச் சென்றுவிட்டது...
நிகிதாவின் கதி அதோகதி.இதைப்பார்த்த நிகிதாவின் சினேகிதிகள் கூச்சலிட்டு கிராம மக்களைக் கூட்டியிருக்கிறார்கள்...
கூடியமக்கள் செய்வதறியாது சிறுத்தையைத் துரத்திவிட்டதுடன் வனத்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.வனத்துறையும் பல இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டினை வைத்திருக்கிறார்கள்....
அந்தக் கூண்டுகளில் ஒன்றில் சிறுத்தையும் மாட்டிவிட்டது அதைக்கண்ட கிராம மக்கள் வனத்துறயினர் வருவதற்குமுன்னரே அந்த மக்கள் ஆவேசமாகவோ அல்லது மிகக் குரூரமாகவோ மண்ணெண்ணையை கூண்டிற்குள் ஊற்றி அந்தச் சிறுத்தையை கூண்டோடு தீயைவைத்துக் கொளுத்திவிட்டார்கள். முடிந்தது அந்தச் சிறுத்தையின் உயிர்....
இதன் பின்னர் இந்தசம்பவம் குறித்து வனத்துறையினர் குற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்...
இந்த சம்பவத்தில் தவறை இழைத்தது யார்
அந்தச் சிறுமியா?...
இல்லை அந்தப் சிறுத்தையா?...
இல்லை ஊர் மக்களா?....
இல்லை வனத்துறையா?....
மாற்றங்களை எப்படி
ஏற்படுத்துவது ?...
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
No comments:
Post a Comment