"பைலக்குப்பே" - அய்யோ என்னத் தப்பா நெனச்சுக்காதீங்க...
சொன்னா நம்புங்க இது ஒரு ஒரு ஊரின் பெயர் இது வேற எங்கயும் இல்லே நம்ம மைசூருக்கு அருகே உள்ள கூர்க் பகுதியில்உள்ள நகரமான குஷால்நகர் க்கு ஆறு கிமீ தொலைவில்உள்ள ஊர்தான் "பைலக்குப்பே"...
அங்க நுழஞ்சிட்டீங்கன்னா உங்களுக்கு இந்தியாவுக்குள்தான் இருக்கோமாங்கிற சந்தேகம் வந்திடும், என்னன்னா எங்க பார்த்தாலும் சின்னக்கண்களோடும் கொஞ்சம் அமுங்கின மூக்குகளோடும் இருக்கிற ஆட்களைத்தான் பார்க்க முடியும் இது சீனாவாங்கற மாதிரி இருக்கும்!....
ஆமாம் அங்கே இருப்பவர்களெல்லாம் இப்போதைய சீன-திபெத் பகுதியிலிருந்து வந்து இங்கேயே செட்டில் ஆனவங்க அவங்கள அகதிகள்னு சொன்னா நம்மூரில் பெரிய அரசியல் ஆகிவிடும்...
அங்கே இருக்கிற பெரிய தங்க புத்தர் கோவிலின் ஒரு பகுதிதான் இது பேரே "கோல்டன் டெம்பிள்"-னுதான் சொல்றாங்க...
இங்கே புத்த மதத்தைச் சொல்லிக்கொடுக்கிற பல்கலைக்கழகமே இருக்குதுன்னா பார்த்துக்குங்க. நம்ம இந்திய அரசு எவ்வளவோ வசதி அவர்களுக்காக செய்து கொடுத்துள்ளது கூடவே விவசாய நிலங்களும்...
இந்தியா முழுவதும் ஸ்வெட்டர் உட்பட உல்லன் துணிவகைகளை பெரிய அளவில் வியாபாரம் செய்வது இவர்கள்தான் சும்மா பறந்து பறந்து பலர் வியாபரம் செய்வது இவர்களிடம் சாதாரணம் (விமானத்தில்தான்) இந்தியாவிற்குள் ஒரு புது டிரென்ட் நுழைவது என்றால் முதலில் இவர்கள் மூலம்தான் அப்புறம்தான் நம்ம பசங்க ஜட்டிதெரிய பேன்ட் போடுவதும்,தலையை வித விதமாக மாற்றிக் கொள்வதும்...
இங்கு மட்டுமல்ல நமது தமிழக எல்லையான சத்தியமங்கலம் மலைக்கு அருகில் இருக்கும் உடையார்பாளையத்தில் கூட(தலாய்லாமா அடிக்கல் நட்டிய கோவில் என்பது குறுப்பிடத்தக்கது)இவர்களது புத்த விஹாரங்களும் இவர்களது குடியிருப்பும் உள்ளது.அதாவது திபெத் பகுதியில் இவர்களது வாழ்க்கைச்சூழல் எப்படியிருந்ததோ கிட்டத்தட்ட அதே வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொடுத்து இருக்கிறது இந்த இந்திய அரசு....
ஆனால் இவர்கள் மிக நாணயமானவர்கள் என பலராலும் சொல்லப் படுகிறது...
இவர்கள் வாழ்க்கைத்தரம் எங்கோயோ போய்விட்டது விதவிதமான உயர் ரக கார்களைக் கூட இவர்களிடம் இங்கு பார்க்க முடியும்...
(இவர்களை அகதிகள் என்று தமிழர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். மண்டபத்திலுள்ள அகதிகள் முகாமிலுள்ளவர்களையும் இவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து டென்சன் ஆனால் நான் பொறுப்பில்லை)
முன்பு இறந்தவர்களுடைய ஈமசடங்குகளில் புதைக்கவோ எரிக்கவோ செய்யாமல் உடல்களை சிறுசிறு துண்டங்களாக்கி பறவைகளுக்கு இரையாக கொடுக்கும் வழக்கம் இருந்தது. இங்கு அந்த சடங்குகள் இங்குள்ளவர்களுக்கு ஐயத்தை உண்டாக்கியதாலும் அரசு ஒப்புக் கொள்ளாத்தாலும் புதைக்கும் வழக்கத்தை கொண்டு வந்துவிட்டார்கள்.இமயத்தில் வசித்து வந்த்தால் குளிக்கும் பழக்ககமும் இல்லாமலிருந்தது.இப்போது மாற்றம் அடைந்துவிட்டார்கள்.என்றாலும் தென்னிந்திய மொழிகள் அவர்களுக்கு சரியாக உச்சரிக்க முடிவதில்லை என அவர்களுடன் பழகிய எமது நண்பர் கதிர்வேல்ராமசாமி சொல்கிறார்...
வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள் பார்க்க வேண்டிய இடம்....
No comments:
Post a Comment