Monday, 6 March 2017

வரையாடுகள் வருத்தமளிக்கும் எண்ணிக்கை



வரைமுறையில்லாமல் அழிக்கப்பட்ட வரையாடுகள்...

சங்க காலத்தில் இந்த வரையாடுகளை மரையா,
வருடை 
எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,காடுவாழ் உயிரினமாய் இருந்தாலும் தமிழ்சமுதாயத்தோடு இது மிக நெருங்கியிருந்ததை அறியலாம்...

நம்ம ஊரிற்கு மட்டுமே உரித்தான,உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாதவைதான் நம்ம ஊரு வரையாடுகள்...




இப்படி ஒரு உயிரினம் உலகில் குறிப்பிட்ட ஒருபகுதிகளில் மட்டுமேகாணப்படும் சிறப்புத்தன்மை கொண்டவைகளை ஓரிடவாழ்வி(Endemic) என்பார்கள்.அதாவது உலகில் ஓரிடத்தில் மட்டுமே வாழக்கூடியவை...

இப்படிப்பட்ட சிறப்புத்தன்மை கொண்டதுதான் நமது தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு.வரை என்றால் சறுக்கும் பாறை எனப் பொருள்படும்.பெயரிற்கேற்ப மலைச்சிகரங்களின் உயர்வான பாறைச் சரிவுப் பகுதிகளையே தமது வாழிடமாக கொண்டுள்ளன...




காட்டாடுகளிலேயே உருவமைப்பில் பெரியவை இந்த வரையாடுகள்.இதன்பினோக்கி வளைந்தகொம்பில் வரிவரியான வளையங்கள்போல் வரிகள் இருக்கும்,இதன் உடல்நிறம் பாறைகளையொத்த நிறத்தில் பொருந்தி(camouflage)எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவில் இருக்கும்.ஆண் மற்றும் பெண் ஆட்டிற்கும் கொம்புகள் உண்டு. மலையாடான இமாலய ஆட்டினைவிடப உருவில் பெரியது  இவை.ஆண்ஆட்டைவிட பெண்ஆடு சிறியவையாக இருக்கும்...

இவற்றின் இன்றைய நிலை ஆழ்ந்த கவலைக்குரியது.இருநூறு ஆண்டுகள் இந்தமண்ணை ஆக்கரமித்த அன்னியர்கள் இயற்கைக்கு மட்டும் தீராத பாதிப்பைச் செய்துவிட்டுச் சென்றுவிட்டனர்.மலைப்பகுதிகளில் உள்ள சோலைக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை,காபி,யூகலிப்டஸ்,பைன் போன்ற இந்த மண்ணுக்குதவாத மலட்டுமரங்களை பயிர்செய்தபின் பார்க்கப் பசுமையாக உள்ள பசும்பாலைவனங்களாக மாற்றிச் சென்றதால் புல்வெளிப் பரப்பு குறுகிக் கொண்டே வந்து இப்போது கேரள தமிழக பகுதிகளில்உள்ள வனங்களில் புல்வெளிக் காடுகள் சிறு சிறு தீவுகளைப்போல் ஆகிவிட்டதால் வரையாடுகளின் வாழிடமும்  சிதறி சிறு சிறு குழுவாக பிரிந்துவிட்டது.இதனால் மேம்பாடுடைய தன்மையிலான வரையாடுகள் உருவாவது என்பது சவாலான விசயமாகிவிட்டது...


துப்பாக்கியோடு வந்த வெள்ளையர்களுக்கு பொழுதுபோக்கு சிவிங்கிப்புலி வேட்டையைப் போலானது வரையாடு வேட்டையும் பல்லாயிரக்கணக்கில் இருந்த இவற்றின் எண்ணிக்கை நல்ல வேளையாக ஓரிரு ஆயிரங்களில் மிஞ்சியது...

பிறகு நம்ம ஆட்களும் இறைச்சிக்கும் தோலிற்கும் கொன்றதோடு புலிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் இரையாகி எண்ணிக்கையளவு சில நூறானது. வனவிலங்கு சட்டத்தை கடுமையாக நடைமுறைப் படுத்தியதால் 2014 வருடகணக்கெடுப்பின்படி சுமார் இரண்டாயிரத்துஐநூறுறிற்கு மேலாகிவிட்டது ஓரளவு ஆறுதலான விசயம்.ஆனாலும் இன்றும் மனிதர்களால் கள்ளவேட்டை தொடர்வதாகவே சொல்லப்படுகிறது...




தற்போது தமிழகத்தில் வால்பாறை,களக்காடு,மேகமலை,நீலகிரி பகுதிகளிலும் கேரளவனப்பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது....

இவற்றின் சிறப்பியல்பே செங்குத்தான மலைச்சரிவுகளில் திறமையாக ஓடுவதும்,விளையாடுவதும்,சண்டையிடுவதுமே அதற்கான வகையில் இதன் கால்களின் அமைப்பு உள்ளது.ஓய்வெடுக்கவும் பாதுகாப்பிற்காகவும் பாறைப்பிளவுகளையே தேர்ந்தெடுக்கின்றன...



பொதுவாக வரையாடுகள் மனிதர்களைக்கண்டால் அச்சப்பட்டு கூச்சப்பட்டு மறைந்துவிடும் ஆனால் வால்பாறை ரோட்டில் நான்காவது வளைவிலிருந்து பனிரெண்டாவது வளைவுவரை சாதரணமாகப் பார்க்கலாம்.மனிதர்களைக் கண்டுகொள்வதே இல்லை...

சாலையோரத்திலேயே இவைகள் மேய்வதால் வாகனப்புகையினாலும் வளர்ப்பு கால்நடைகளை வனத்திற்குள் மேய்ச்சலுக்கு விடுவதாலும் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் நிலை இருக்கிறது...


இந்த சிறப்புமிக்க உயிரினத்தை காப்பது அரசிற்கும் வனத்துறைக்கும் மட்டுமல்ல நம் அனைவருக்கும் மிகப் பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து  இதன்வாழிடங்களைச் சுருங்காமல் பாதுகாத்து,இவற்றிற்கு இடையூறு செய்யாமல் பாரம்பரியம் மிக்க நமது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பல்லுயிர்ச் சூழலைக் காப்போம்...

சூழலியல் ஆர்வத்துடன்.
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi

எமது முகநூல் பதிவின் இணைப்பு: https://m.facebook.com/story.php?story_fbid=1123696621079705&id=100003181323647

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...